ஆப்நகரம்

அரியர் மாணவர்கள் ஆல் பாஸ் என்ற அரசின் அறிவிப்புக்கு ஆப்பு?

பொறியியல் பட்டப்படிப்பு பாடங்களில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் ஆல்-பாஸ் என்ற தமிழக அரசின் அறிவிப்பு யுஜிசி விதிகளுக்கு புறம்பானது என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) தெரிவித்துள்ளது.

Samayam Tamil 30 Sep 2020, 5:40 pm
கொரோனா அச்சம் காரணமாக, நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு கடந்த மார்ச் 16 ஆம் தேதி முதல் ஆறு மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக, பொறியியல் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு கடந்த கல்வியாண்டுக்கான (2019 -20) பருவத் தேர்வுகள் நடத்த முடியாமல் போய்விட்டது.
Samayam Tamil aicte


இதனையடுத்து, இறுதிப் பருவத் தேர்வு தவிர்த்து, பிற பருவப்பாடங்களின் தேர்வுக்கான கட்டணம் செலுத்தி காத்திருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் யூஜிசி, ஏஐசிடிஇ வழிகாட்டுதலின்படி, தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் அறிவித்திருந்தார். அரியர் பாடத் தேர்வுகளை எழுக காத்திருக்கும் மாணவர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

அரியர் மாணவர்கள் ஆல் -பாஸ் என்ற முதல்வரின் இந்த அறிவிப்பை எதிர்த்து, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

அரியர்ஸ் தேர்ச்சியை ஏற்க ஏ.ஐ.சி.டி.இ. மறுப்பு; மாணவர்களுக்கு அதிர்ச்சி தகவல்!

இந்த வழக்கில் ஏஐசிடிஇ தரப்பிவ் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், "அரியர் தேர்வு மாணவர் விஷயத்தில் தமிழக அரசின் அறிவிப்பு யுஜிசி விதிகளுக்கு புறம்பானது. மேலும், கல்லூரி இறுதிப்பருவ தேர்வு கண்டிப்பாகக நடத்தப்பட வேண்டும்.

அனைத்துத் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மாணவர்களுக்கு பட்டம் வழங்க முடியும். தேர்வு எழுதுவதில் இருந்து மாணவர்களுக்கு எந்த விலக்கும் அளிக்கப்படவில்லை" என்று தமது பதில் மனுவில் ஏஐசிடிஇ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு நிபந்தனைகள் சட்டவிரோதமானது: உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

அரியர் தேர்வு ரத்து என்ற தமிழக அரசின் முடிவு தவறானது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தேன்.

இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது , ஏ.ஐ.சி.டி.இ.-யின் நிலைப்பாடு குறித்து நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்படும் என்று அதன் தலைவர் அனில் சஹஸ்ரபுத்தே ஏற்கெனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி