ஆப்நகரம்

இலவச நாப்கின்: தமிழக அரசு ரூ.44 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!

இலவச நாப்கின் வழங்க ரூ.44 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

Samayam Tamil 16 Dec 2020, 7:53 pm
மாதவிலக்கு அல்லது மாதவிடாய் என்பது ஒரு பூப்படைந்த பெண்ணின் உடலில், மாதந்தோறும் சுழற்சி முறையில் நிகழும் ஒரு உடலியங்கியல் மாற்றமாகும். இந்நிகழ்வானது பெண்களுக்கு மாதந்தோறும் சுமார் மூன்று முதல் ஏழு நாட்களுக்கு நடைபெறுகிறது. பெரும்பாலான பெண்கள் மாதவிடாயின்போது 50 மி.லி. வரை உதிரம் இழக்கிறார்கள்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


தமிழகத்தை பொறுத்தவரை இந்த காலகட்டத்தில் பெண்கள் தன் சுத்தத்தை ஊக்குவிக்க வளரிளம் பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கான மாதவிடாய் சுகாதாரத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் கீழ் பள்ளி மாணவிகளுக்கும், கிராமப்புறங்களில் உள்ள வளரிளம் பெண்களுக்கும், தாய்மார்களுக்கும் இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

சிறைகளில் உள்ள பெண் கைதிகள், மன நலக் காப்பகத்தில் உள்ள பெண்களுக்கும் அவை வழங்கப்படுகின்றன. ஆண்டொன்றுக்கு ரூ.60.58 கோடி அதற்காக ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஏறத்தாழ 6 கோடி நாப்கின்கள் அரசு சார்பில் வழங்கப்படுவதாக தெரிகிறது.

தமிழகத்தில் அடுத்த 5 மாதங்களுக்கு பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை!

இந்த நிலையில், கிராமப்புற வளரிளம் பெண்களுக்கிடையே செயல்படுத்தப்பட்டு வரும் "மாதவிடாய் கால தன் சுகாதாரத் திட்டம்" ரூ.37.47 கோடியில் நகர்ப்புற பள்ளி மாணவியர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும், அனைத்து அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளியாக சிகிச்சை பெறும் பெண்களுக்கும் சானிடரி நாப்கின்கள் வழங்கப்படும் என்றும் 2020-21ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின் போது சட்டப்பேரவை விதி எண் 110இன் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.

அரசாணை


அரசாணை


அதன் தொடர்ச்சியாக, நகர்ப்புற அரசுப் பள்ளி மாணவிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் பெண்களுக்கு இலவச நாப்கின்கள் வழங்க ரூ.44 கோடியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அடுத்த செய்தி