ஆப்நகரம்

கெயில் திட்டத்துக்கு எதிரான சீராய்வு மனுக்கள் தள்ளுபடி

விளைநிலங்கள் வழியே எரிவாயு குழாய் பதிக்கும் கெயில் திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட தமிழக அரசு மற்றும் தேமுதிக-வின் சீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

TNN 8 Mar 2016, 12:45 pm
புதுதில்லி: விளைநிலங்கள் வழியே எரிவாயு குழாய் பதிக்கும் கெயில் திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட தமிழக அரசு மற்றும் தேமுதிக-வின் சீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Samayam Tamil tn govt and dmdk petitions which opposes gail scheme rejected in sc
கெயில் திட்டத்துக்கு எதிரான சீராய்வு மனுக்கள் தள்ளுபடி


முன்னதாக, மத்திய அரசின் இந்திய எரிவாயு கட்டுப்பாட்டு நிறுவனமான‌ கெயில் நிறுவனம், கேரள மாநிலம் கொச்சியில் இருந்து பெங்க ளூருவுக்கு கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய 3 மாநிலங் களின் வழியாக 871 கிலோ மீட்டர் தொலைவுக்கு விளைநிலங்களுக்கு அடியில் குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்ல முடிவெடுத்தது.

இதற்கு விவசாயிகள் கடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக எரிவாயுக் குழாய்களைப் பதித்து, திட்டத்தைச் செயல்படுத்துமாறு தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கெயில் நிறுவனம் தொடுத்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசின் ஆணைக்குத் தடை விதித்தது. இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்நிலையில், இந்த மேல்முறையீட்டு வழக்கில் அண்மையில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், "தமிழகத்தில் கெயில் நிறுவனம் உத்தேசித்த எரிவாயு திட்டத்தை விவசாய நிலங்களின் வழியாகவே செயல்படுத்தலாம்" என்று உத்தரவிட்டது.

இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் அளித்தது. அதேபோல், தேமுதிக சார்பிலும் சீராய்வு மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணையை இன்று நடத்திய உச்ச நீதிமன்றம், விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி தமிழக அரசு மற்றும் தேமுதிக-வின் சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது.

அடுத்த செய்தி