ஆப்நகரம்

மதுவிலக்கு அமலாக்க 5 அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவலர் விருது..!

மதுவிலக்கு அமலாக்கபணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியமைக்காக தமிழக அரசு காந்தியடிகள் காவலர் விருது அறிவிப்பு.

Samayam Tamil 2 Oct 2022, 12:17 pm
மதுவிலக்கு அமலாக்கபணியில் 5 அதிகாரிகளுக்கு தமிழக அரசு காந்தியடிகள் காவலர் விருது அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; காவல்துறை தலைமையகத்தில் மத்திய நுண்ணறிவு பிரிவில் ஆய்வாளராக உள்ள த.எ.பிரியதர்ஷினி, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் கா.ஜெயமோகன், சேலம் மண்டலம் மத்திய நுண்ணறிவு பிரிவு உதவி ஆய்வாளர் ச.சகாதேவன், விழுப்புரம் மண்டலம் மத்திய நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆய்வாளர் பா.இனாயத் பாஷா, செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் காவல் நிலைய தலைமைக் காவலர் சு.சிவனேசன் ஆகியோருக்கு மதுவிலக்கு அமலாக்கபணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியமைக்காக காந்தியடிகள் காவலர் விருது வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Samayam Tamil gandhi award


இவ்விருது, முதல்வரால், அடுத்த ஆண்டு ஜன.26 குடியரசு தினத்தில் வழங்கப்படும். விருதுடன், பரிசுத் தொகையாக தலா ரூ.40 ஆயிரம் வழங்கப்படும் என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி