ஆப்நகரம்

தமிழக கோயில்களில் பெண் அர்ச்சகர்கள்! விரைவில் பயிற்சி - தமிழக அரசு

தமிழகத்தில் அர்ச்சகராக விரும்பும் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 12 Jun 2021, 2:33 pm
தமிழகத்தில் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு விரைவில் அர்ச்சகர் ஆக்க பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று தெரிவித்துள்ளார்.
Samayam Tamil கோப்புப்படம்


தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்கும் சட்டப்படி அடுத்த நூறு நாளில் பணி நியமனம் வழங்கப்படும் என்றும், இனிவரும் காலங்களில் கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வதை அரசு உறுதி செய்யும் எனவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அண்மையில் தெரிவித்தார்.

இது தொடர்பாக சென்னையில் இன்று அமைச்சர் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், '' தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற பதாகை வைக்கப்படும்.

9ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை - அறிவித்தார் அமைச்சர்

தமிழகத்தில் பெண்களையும் அர்ச்சகராக்கும் திட்டம் உள்ளது. அர்ச்சகராக விரும்பும் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பற்றாக்குறை உள்ள இடங்களில் பெண்கள் நியக்கமிக்கப்படுவர் என்றும் ஏற்கனவே கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைப்படியே ஜீயர்கள் தொடர்ந்து நியமிக்கப்படுவர் என்றும் அமைச்சர் கூறினார்.

அடுத்த செய்தி