ஆப்நகரம்

விசாரணைக் குழு அமைத்த தமிழக அரசு; அப்படியே ஷாக்கான சூரப்பா!

சூரப்பா மீதான புகாரை விசாரிக்க குழு ஒன்றை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 13 Nov 2020, 3:46 pm
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்புத் தகுதி வழங்கும் விவகாரத்தில் துணைவேந்தர் சூரப்பா அதிருப்தி தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக அவர் மீது ஏராளமான புகார்கள் கூறப்பட்டன. இந்நிலையில் துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்களை விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு ஒன்றை தமிழக அரசு இன்று அமைத்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள உத்தரவில்,
Samayam Tamil M K Surappa


* அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் பிற உறுப்பு கல்லூரிகளில் தற்காலிக விரிவுரையாளர்களை நியமிக்க பல கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளது. இதில் துணைவேந்தர் சூரப்பாவிற்கும் தொடர்பிருப்பதாக புகார்கள் வந்துள்ளன.

* தேர்வுத்துறை அலுவலகத்தில் உதவியாளர்கள் பணி உயர்வு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் போலி சான்றிதழ்கள் அளிக்கப்பட்டு அரங்கேறியுள்ளதாக புகார் வந்துள்ளது.

* கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்ற விவகாரத்தில் AICTE-க்கு தவறான தகவல்களை துணைவேந்தர் சூரப்பா இ-மெயில் மூலம் அனுப்பியுள்ளதாக புகார் வந்துள்ளது.

* அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தனது மகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தந்துள்ளதாக புகார்கள் வந்துள்ளன. மேலும் செமஸ்டர் தேர்வுகள் எழுதுவதில், மறு மதிப்பீடு செய்வதில் ஏராளமான முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார்கள் வந்திருக்கின்றன.

தமிழை கற்பிக்க நிபந்தனை: மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்!

இந்த புகார்கள் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு மூன்று மாதங்களில் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சூரப்பா மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த சூழலில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்திக்க சூரப்பா முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சூரப்பா, என் மீதான புகார்கள் குறித்து விசாரிக்க தமிழக அரசு குழு அமைத்தது அதிர்ச்சி அளிக்கிறது.

நான் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை. பெயர் குறிப்பிடாமல் சில மிரட்டல் கடிதங்கள் எனக்கு வந்துள்ளன. அதற்கு அடிபணியாத காரணத்தால் என்மீது அவதூறு புகார்கள் தெரிவிக்கின்றனர். எனது வங்கிக் கணக்கு விவரங்களை யார் வேண்டுமானாலும் சரிபார்த்துக் கொள்ளலாம். ஆளுநரை நான் சந்திக்கப் போவதில்லை. எதையும் சந்திக்க தயார் என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி