தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் ஸ்டாலின் பதவியேற்றதில் இருந்து, அரசு அதிகாரிகள் மட்டத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். தலைமை செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் மற்றப்பட்டு, அவருக்கு பதிலாக இறையான்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், சென்னை மாநகரக் காவல் ஆணையர், சென்னை மாநகராட்சி ஆணையர், உளவுத்துறை, சட்டம் ஒழுங்கு டிஜிபி என அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. முன்னதாக, தேர்தல் முடிவுகள் வெளியானதும், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன் ராஜினாமா செய்தார். இதையடுத்து, தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிறப்பித்துள்ளார். தொடர்ந்து அவரது நியமனத்துக்கான அதிகாரப்பூர்வ அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
1996- 2001இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராகப் பணியாற்றிய அனுபவம் உடைய சண்முகசுந்தரம், சட்டம், கல்வி, சமூக அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளார். இவர் 2002- 2008 ஆம் ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
கடந்த 1977 ஆம் ஆண்டு வழக்கறிஞராகப் பதிவு செய்த சண்முகசுந்தரம், 2015- 2017இல் சென்னை வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராக பொறுப்பு வகித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணையில் ஜெயின் கமிஷனுக்கு உதவ தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்டவர் சண்முகசுந்தரம் என்பது குறிப்பிடத்தக்கது.
1996- 2001இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராகப் பணியாற்றிய அனுபவம் உடைய சண்முகசுந்தரம், சட்டம், கல்வி, சமூக அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளார். இவர் 2002- 2008 ஆம் ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
கடந்த 1977 ஆம் ஆண்டு வழக்கறிஞராகப் பதிவு செய்த சண்முகசுந்தரம், 2015- 2017இல் சென்னை வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராக பொறுப்பு வகித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணையில் ஜெயின் கமிஷனுக்கு உதவ தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்டவர் சண்முகசுந்தரம் என்பது குறிப்பிடத்தக்கது.