ஆப்நகரம்

ராஜீவ் கொலை வழக்கு: 7 பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு?

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில், சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வதில், மத்திய அரசின் கருத்து கேட்டு, தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

TOI Contributor 2 Mar 2016, 8:21 pm
முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில், சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வதில், மத்திய அரசின் கருத்து கேட்டு, தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
Samayam Tamil tn govt asks home ministry opinion in releasing the 7 accuses in rajiv killing case
ராஜீவ் கொலை வழக்கு: 7 பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு?


இதுபற்றி, தமிழக தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், சிஆர்பிசி 432 சட்டப் பிரிவின்படி, மாநில அரசுக்கு உள்ள சிறப்பு உரிமையின் அடிப்படையில், ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலிருக்கும் பேரறிவாளன்,முருகன்,நளினி,சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய, தமிழக அரசு பரிசீலித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இதுதொடர்பாக, சிறப்புத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, இவ்விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு பற்றி உடனே தெரிவிக்கும்படி, அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், ராஜீவ் கொலை வழக்கில், இறுதி முடிவு செய்யும் பொறுப்பு மத்திய அரசுக்கே உள்ளதாகவும், தமிழக அரசு தனிப்பட்ட முடிவு எடுக்க முடியாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் நெருங்கியுள்ளதால், மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாகவே, ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி