ஆப்நகரம்

சீருடை தையல் கூலி தராததால் அரசு பஸ் டிரைவர் நூதனப் போராட்டம்

கம்பம்: அரசுப் பேருந்து டிரைவர், கண்டக்டர்களுக்கு சீருடையுடன் தையல் கூலி தராததைக் கண்டித்து ஒரு டிரைவர் நூதனப் போராட்டம் நடத்துகிறார்.

Samayam Tamil 28 Aug 2018, 4:27 pm
கம்பம்: அரசுப் பேருந்து டிரைவர், கண்டக்டர்களுக்கு சீருடையுடன் தையல் கூலி தராததைக் கண்டித்து ஒரு டிரைவர் நூதனப் போராட்டம் நடத்துகிறார்.
Samayam Tamil jhfjkfg


தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மதுரை மண்டலம் திண்டுக்கல் கோட்டத்திற்கு கம்பத்தில் இரண்டு கிளைகள் பணிமனைகளுடன் உள்ளன. இங்கு பணிபுரியும் டிரைவர், கண்டக்டர்களுக்கு சில ஆண்டுகளாக போக்குவரத்துக் கழக நிர்வாகம் சீருடையும், அதற்கான தையல் கூலியும் வழங்கவில்லை.

இதனால், கடந்த ஏப்ரல் மாதம் கம்பம் கிளை இரண்டில் பணிபுரியும் ஜெயமங்கலத்தை சேர்ந்த டிரைவர் பாலகிருஷ்ணன், நிர்வாகம் சீருடை வழங்கினால்தான் சீருடையில் பணி செய்வேன். அதுவரை வண்ண ஆடையிலேயே பஸ் ஓட்டுவேன் என்று கூறி கடந்த நான்கு மாதங்களாக அப்படியே பணியைச் செய்துவருகிறார்.

இந்நிலையில், சில நாட்களாக போக்குவரத்து ஊழியர்களுக்கு புதிதாக இரண்டு செட் சீருடைத் துணி வழங்கப்படுகிறது. ஆனால், தையல்கூலி வழங்கப்படவில்லை.

இதனால், கம்பம் பஸ்டாண்டில் சீருடை தைக்க நிர்வாகம் தையல் கூலி தரவில்லை எனக்கூறி டிரைவர் பாலகிருஷணன் தனக்குக் கொடுத்த சீருடைத் துணியை தோளில் போட்டுக்கொண்டே பஸ் ஓட்டினார்.

“ஊழியர்களுக்கு 12 செட் சீருடை வழங்க வேண்டியுள்ளது. ஆனால் 2 செட் மட்டுமே கொடுத்துள்ளனர். அதற்கான தையல் கூலியும் வழங்கவில்லை. என் சீருடைத் துணியைக் கையோடு வைத்துள்ளேன். கூலி தரும் வரை சீருடைத் துணியை தோளில் போட்டுக்கொண்டுதான் பஸ் ஓட்டுவேன்.” என்று அவர் கூறுகிறார்.

அடுத்த செய்தி