ஆப்நகரம்

“சென்னை இ-பாஸ் நிறுத்தமா?” நீதிபதிகளை தெளிவுபடுத்திய அரசு!

சென்னையில் இ-பாஸ் வழங்குவது நிறுத்தப்பட்டது என்ற வதந்தி உயர் நீதிமன்ற நீதிபதிகள் வரை சென்றுள்ளது...

Samayam Tamil 12 Jun 2020, 1:03 pm
சென்னையில் அரசு மேற்கொள்ளும் கொரோனா தடுப்புப் பணிகள் தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ் குமார் சில கேள்விகளை எழுப்பினர்.
Samayam Tamil “சென்னை இ-பாஸ் நிறுத்தமா?” நீதிபதிகளை தெளிவுபடுத்திய அரசு பதில்!
“சென்னை இ-பாஸ் நிறுத்தமா?” நீதிபதிகளை தெளிவுபடுத்திய அரசு பதில்!


சுமோடோ வழக்காக இந்த வழக்கை எடுத்துக் கொள்ளவில்லை என தெளிவுபடுத்திய நீதிபதிகள் இன்று அரசு பதிலளிக்க வேண்டும் எனக் கூறியிருந்தனர்.

இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாகத் தமிழ்நாடு அரசு, “சென்னையில் ஊரடங்கைத் தீவிரப்படுத்தும் திட்டம் எதுவும் இப்போதுவரை இல்லை. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மட்டும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளோம்” எனக் குறிப்பிட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, “சென்னையில் இ-பாஸ் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதா?” எனக் குறித்த நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

நெகட்டிவ் வந்தால் தனிமைப்படுத்தலா? சுகாதாரத் துறை விளக்கம்!

இதற்குப் பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், “இ-பாஸ் தொடர்பாக வதந்தி பரவியுள்ளது. அதுபோன்ற எந்த நடவடிக்கையும் நாங்கள் மேற்கொள்ளவில்லை. மருத்துவ நிபுணர் குழு வழங்கும் வழிகாட்டுதல் அடிப்படையில், நாங்கள் முடிவுகளை எடுத்து வருகிறோம்” என்றார்.


இந்த பதில்களை ஏற்ற நீதிபதிகள், ஊரடங்கைத் தீவிரப்படுத்துவது தொடர்பான வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாகவும், அதன் விசாரணை திங்கட்கிழமை தொடங்கும் என்றும் அறிவித்தது.

அடுத்த செய்தி