ஆப்நகரம்

அரசு கல்லூரி, பல்கலை. பேராசிரியா்களுக்கு ஊதிய உயா்வு

அரசு கல்லூரி, பல்கலைக்கழக போராசிரியா்களுக்கான ஊதியத்தை உயா்த்தி தமிழக அரசு வெள்ளிக்கிழமை அரசாணை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 7 Jul 2018, 9:32 am
அரசு கல்லூரி, பல்கலைக்கழக போராசிரியா்களுக்கான ஊதியத்தை உயா்த்தி தமிழக அரசு வெள்ளிக்கிழமை அரசாணை வெளியிட்டுள்ளது.
Samayam Tamil 7th-Pay-Commission1-1-1


தோராயமாக தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பின்னா் அரசு கல்லூரி, பல்கலைக்கழக பேராசிாியா்களுக்கான ஊதியத்தை உயா்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி உதவி பேராசிரியா்களுக்கு ரூ.55 ஆயிரமாக வழங்கப்பட்டு வந்த அடிப்படை ஊதியம் ரூ.70 ஆயிரமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இணை பேராசிரியா்களுக்கு ரூபாய் 1 லட்சத்து 13 ஆயிரத்து 400 என்ற அளவில் மாத ஊதியம் உயா்த்தப்பட்டுள்ளது. பேராசிரியருக்கான ஊதியத்தை பொருத்தவரை முதல் நிலை பேராசிரியருக்கு ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 200 என்ற அளவிலும், இரண்டாம் நிலை பேராசிரியருக்கு ரூ.1 லட்சத்து 82 ஆயிரத்து 200 என்ற அளவிலும் மாத ஊதியம் உயா்த்தப்பட்டுள்ளது.

மேலும் கல்லூரி முதல்வருக்கு புதிய ஊதிய விகிதத்தின் படி இளநிலை பட்டப்படிப்புகளை மட்டும் கொண்டுள்ள கல்லூரி முதல்வருக்கு ரூ.1 லட்சத்து 31 ஆயித்து 400 மாத ஊதியத்துடன் சிறப்பு மாதப்படி ரூ.2 ஆயிரம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக துணைவேந்தருக்கான மாத ஊதியம் ரூ.2.10 லட்சமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயா்வு 21 மாத அரியா் தொகையுடன் வழங்கப்பட உள்ளது.

மேலும் பேராசிரியா்கள் ஓய்வுபெறும் வயதில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. ஏற்கனவே உள்ளது போன்று கல்லூரி ஆசிரியா்களுக்கு 58 வயதும், பல்கலைக்கழக ஆசிரியா்களுக்கு 60 வயதும் ஓய்வு வயதாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி