ஆப்நகரம்

வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று சொன்ன அரசு மருத்துவர் கைது!

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் என்னவென்று கூறிய சிவகங்கை மருத்துவக்கல்லூரியை சேர்ந்த அரசு மருத்துவர் ஒருவர் குழந்தை பாலினத்தை முன்னரே அறியும் சட்டத்தின் (PCPNDT) கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

TNN 15 Jun 2017, 5:32 pm
கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் என்னவென்று கூறிய சிவகங்கை மருத்துவக்கல்லூரியை சேர்ந்த அரசு மருத்துவர் ஒருவர் குழந்தை பாலினத்தை முன்னரே அறியும் சட்டத்தின் (PCPNDT) கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil tn govt doctor nabbed for revealing gender of fetus
வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று சொன்ன அரசு மருத்துவர் கைது!


பெண் சிசு கொலையை தடுக்க மற்றும் இந்தியாவில் ஆண், பெண் விகிதத்தை சீராக்க கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை முன்னரே அறிய தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டது. சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் செயல்பட்டுவரும் சிவகாமி அறுவை சிகிச்சை மருத்துவமனைக்கு சுகாதார துறையை சேர்ந்த அதிகாரிகள் இரண்டு கர்ப்பிணி பெண்களை அனுப்பி சோதனை மேற்கொண்டனர்.

சிவகங்கை மருத்து கல்லூரியை சேர்ந்த மருத்துவர் அருண் தண்டபானி சிவகாமி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். கர்ப்பிணி பெண்கள் இருவருடன் மதுரை இணை இயக்குநர் மருத்துவர் என்.ருக்மணி உள்ளிட்ட சீனியர் மருத்துவர்கள் சென்றனர். கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் செய்ய 850 ரூபாய் பெற்றுக்கொண்ட அருண், குழந்தையின் பாலினத்தை சொல்ல 3000 ரூபாய் பெற்றுக்கொண்டுள்ளார்.

அதன்பின்னர் டிசிபி தாமஸ் பிரபாகரன் தலையில் காவலர் குழு 6000 ரூபாய் பணத்தையும், நவீன உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் கருக்கலைப்பு செய்ய பயன்படுத்தும் மருந்துகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பாலினம் தெரிந்து கருக்கலைப்பு செய்ததற்கான ஆதாரம் ஏதும் மருத்துவமனையில் கிடைக்கவில்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மருத்துவர் அருண் தண்டபானி நாளை (15.06.17) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். மேலும் சுகாதாரத்துறையானது அருணுக்கு எதிரான புகாரை மருத்துவ கல்வி இயக்குநரகத்திற்கு அனுப்பியுள்ளது. மருத்துவர் அருணின் மருத்துவ உரிமத்தை ரத்து செய்யக்கோரி சுகாதாரத்துறை, மருத்து குழுவிற்கு புகார் மனுவை அனுப்ப உள்ளனர் என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி