ஆப்நகரம்

மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் - தமிழ்நாடு அரசு

அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

Samayam Tamil 30 Jun 2022, 3:57 pm
அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 அவரவர் வங்கி கணக்கில் நேரிடையாக செலுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவிகள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெரும் வகையில் அரசு அதற்கான வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
Samayam Tamil school girl students monthly cash


அரசின் இந்த அறிவிப்பால் அரசு பள்ளி மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்காக ரூ.698 கோடி நிதியையும் அரசு ஒதுக்கியுள்ளது. இந்த நிலையில், மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், ஜூலை 10 தேதி வரை விண்ணப்ப அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்காக விண்ணப்பிக்கும் மாணவிகள் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்ததற்கான சான்றிதழ், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், கல்லூரி அடையாள அட்டை, ஆதார், வங்கிக் கணக்கு உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். இவற்றை முறையாக பெற்று சமூக நலத்துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அனைத்துக் கல்லூரி முதல்வர்களுக்கும் உயர்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது.

அண்ணே நீங்க செய்யுறது சரி இல்லை: ஓபிஎஸ்ஸுக்கு இபிஎஸ் பதில் கடிதம்!

இந்நிலையில், விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாக இருந்த சூழலில் ஜூலை 10 தேதி வரை விண்ணப்ப அவகாசம் நீட்டிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி