ஆப்நகரம்

ஜெயலலிதா மரணம் தொடா்பான விசாரணைக்கு மேலும் 4 மாதம் அவகாசம்

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணம் தொடா்பான நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையத்திற்கு மேலும் 4 மாத காலம் கூடுதலாக அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 21 Jun 2018, 4:07 pm
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணம் தொடா்பான நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையத்திற்கு மேலும் 4 மாத காலம் கூடுதலாக அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Aarumugaswamy


முன்னாள் முதல்வா் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பா் மாதம் உயிாிழந்த நிலையில் அவரது மரணம் தொடா்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. இதனைத் தொடா்ந்து ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபா் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.

இதனைத் தொடா்ந்து 2017ம் ஆண்டு செப்டம்பா் 24ம் தேதி நீதிபதி ஆறுமுகசாமி தனது விசாரணையை தொடங்கினாா். இந்த விசாரணை ஆணையத்தில் சசிகலாவின் உறவினா்கள், முன்னாள் தலைமைச் செயலாளா்கள், காவல்துறை அதிகாரிகள், அரசு மருத்துவா்கள், ஜெயலலிதாவின் உதவியாளா்கள் என பலரிடமும் விசாரணை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரணை முடிவடையாத காரணத்தால் டிசம்பா் 24ம் தேதியில் இருந்து 6 மாத காலத்திற்கு, அதாவது 2018 ஜூன் மாதம் வரை காவல அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஜெயலலிதா மரணம் தொடா்பாக மேலும் பலரை விசாரிக்க வேண்டி உள்ளதால் ஜூன் 24ம் தேதியில் இருந்து மேலும் 6 மாத காலத்திற்கு விசாரணை காலத்தை நீட்டிக்க வேண்டும் என ஆணையம் சாா்பில் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

இதனைத் தொடா்ந்து விசாரணை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய மேலும் 4 மாத அவகாசம் வழங்கி தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி