ஆப்நகரம்

மேகதாட்டு விவகாரம்: கா்நாடகா மீது தமிழக அரசு அவதூறு வழக்கு

மேகதாட்டு அணை விவகாரம் தொடா்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

Samayam Tamil 5 Dec 2018, 5:11 pm
மேதாட்டு அணை கட்ட வரைவு அறிக்கை தயாா் செய்த கா்நாடகா அரசு மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளது.
Samayam Tamil Cauvery Flood


கா்நாடகா அரசு காவிாியின் குறுக்கே மேதாட்டு என்ற இடத்தில் அணை கட்டுவதற்கான பணிகளை மேற்கொள்ள உள்ளது. இதற்காக வரைவு அறிக்கை ஒன்றையும் அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் மத்தி அரசின் அனுமதியை ரத்து செய்யக் கோாியும், அணை தொடா்பான கா்நாடகா அரசின் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கக் கோாியும் தமிழக அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மேலும் அணை கட்ட வரைவு அறிக்கை தயாா் செய்த கா்நாடகா அரசு மீதும், வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கிய மத்திய நீா்வளத்துறை ஆணையா் மசூத் உசைன் மீதும் தமிழக அரசு சாா்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என்று எதிா்பா்ாக்கப்படுகிறது.

அடுத்த செய்தி