ஆப்நகரம்

ரேஷன் ஊழியர்களுக்கு கிஃப்ட்: அரசாணை வெளியீடு!

நியாயவிலைக் கடை ஊழியர்களுக்கு பரிசு வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

Samayam Tamil 3 Jul 2022, 12:18 pm
நியாயவிலைக் கடை ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மாவட்ட, மாநில அளவில் பரிசு அளிக்க முடிவெடுத்துள்ள தமிழக அரசு, பணியாளர்களை, ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் தேர்வு செய்து அனுப்ப உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது.
Samayam Tamil ரேஷன் கடை ஊழியர்கள்
ரேஷன் கடை ஊழியர்கள்


கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது, நடைபெற்ற உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மானியக் கோரிக்கையின்போது உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர், “மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறந்த நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் / எடையாளர்களைத் தேர்வு செய்து பரிசு வழங்கப்படும். பொதுவிநியோகத் திட்டம் சீராக செயல்படுவதில் நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். விற்பனையாளர்களின் சிறந்த பணியினை ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் அளித்து அங்கீகரிப்பதன் மூலம் அவர்களின் செயல்திறனையும், ஈடுபாட்டினையும் மேம்படுத்தலாம். இதன்பொருட்டு, சிறப்பாகவும், பொதுமக்கள் வரவேற்கதக்க வகையிலும் பணிபுரியும் நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.” என்று அறிவித்தார்.

அதனை செயல்படுத்தும் விதமாக, அதற்கான உத்தரவை பிறப்பித்து நியாயவிலைக் கடை ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மாவட்ட, மாநில அளவில் பரிசு அளிக்க முடிவெடுத்துள்ள தமிழக அரசு, பணியாளர்களை தேர்வு செய்து அனுப்ப உத்தரவிட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமியுடன் பேசிய ராகுல் காந்தி? காங்., விளக்கம்!
சிறப்பாகவும், பொதுமக்கள் வரவேற்கதக்க வகையிலும் பணிபுரியும் நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்குதல் குறித்த ஆணைகள் அதில் வெளியிடப்பட்டுள்ளன.

அடுத்த செய்தி