ஆப்நகரம்

டெங்கு, பன்றிக்காய்ச்சலை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது: ஸ்டாலின் குற்றச்சாட்டு!

சென்னை: தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல், டெங்கு பரவுவதை தடுக்க, தமிழக அரசு தவறிவிட்டதாக திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

Samayam Tamil 1 Nov 2018, 10:00 pm
சமீப காலமாக பன்றிக் காய்ச்சல், டெங்கு நோய் அனைத்துப் பகுதிகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. இதுவரையில் நூற்றுக்கணக்கான மக்கள் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம், தமிழகத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன், 4 பேர் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டனர்.
Samayam Tamil 7


இதே போல டெங்கு காய்ச்சலும் தமிழகத்தில் வேகமாக பரவிவருகிறது. இதை தமிழக அரசு தடுக்க தவறிவிட்டதாக திமுக., தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். அதே நேரத்தில் இதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், ‘டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிஞ்சுக் குழந்தைகளின் மரணங்களைக் கண்டு கூட அ.தி.மு.க அரசு விழித்தெழுந்து செயல்படாமல் இருப்பது வெட்கக்கேடானது.

உடனடியாக தமிழகத்தில் மெடிக்கல் எமர்ஜென்சியை அறிவித்து, இனி எந்தக் காய்ச்சலாலும் ஒரு மரணம்கூட நிகழாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி