ஆப்நகரம்

அரசுப் பணிகளில் நேரடி நியமத்துக்கான வயது உச்சவரம்பு 2 ஆண்டுகள் உயர்ந்தது - அரசாணை

அரசுப் பணிகளில் நேரடி நியமனம் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 16 Sep 2021, 7:07 pm
அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் பணிநியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்சவரம்பை 2 ஆண்டுகள் உயர்த்தி அரசாணை வெளியீடு
Samayam Tamil representative image


அரசு பணிகளில் நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்ச வரம்பு இரண்டு ஆண்டுகள் உயர்த்தப்படும் என்று சட்டசபையில் மனிதவள மேலாண்மை துரையின் மானிய கோரிக்கையின்போது நிதியமைச்சர் அறிவித்தார்.

இந்நிலையில், அதுகுறித்த அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், கொரோனா பெருந்தொற்று காரணமாக பணியாளர் தெரிவு முகமைகளால் நடத்தப்படும் அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகள் தாமதமானதால், நேரடி நியமன வயது உச்ச வரம்பு இரண்டு ஆண்டுகள் உயர்த்தப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.


அதன்படி, அரசு பணிகளில் நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்ச வரம்பு, தற்போதுள்ள 30 ஆண்டுகளிலிருந்து 32 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி