ஆப்நகரம்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை: அரசு எடுக்கும் முடிவு!

tn school summer holiday தமிழக அரசு ஆண்டு இறுதித் தேர்வை முன்கூட்டியே நடத்தி கோடை விடுமுறை விட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 15 Mar 2023, 12:01 pm
தமிழ்நாட்டில் 1 முதல் 9ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வை முன்கூட்டியே நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
Samayam Tamil tn school students leave


இன்ஃப்ளுயன்சா வைரஸ் பரவல், கோடை வெயில் தாக்கம் ஆகியவை காரணமாக பள்ளி மாணவர்களின் ஆண்டு இறுதித் தேர்வை விரைவாக நடத்தி முடிக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்ஃப்ளுயன்சா ஹெச்1 என் 1 புதிய வகை வைரஸ் பரவல் நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் வேகமாக பரவி வருகிறது. மேலும் இவ்வகை காய்ச்சல் குழந்தைகள், முதியவர்களை அதிகம் தாக்குகிறது. இருமல் முலமாக வேகமாக பரவும் தன்மையுடன் இருப்பதால் பள்ளிகளில் மாணவர்களிடம் விரைவாக பரவும் அபாயம் உள்ளது. இதனால் புதுச்சேரியில் மார்ச் 16ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.
வைரஸ் காய்ச்சல் பரவல்: பள்ளிகளுக்கு 11 நாள்கள் விடுமுறை! மாணவர்கள் கொண்டாட்டம்!தமிழ்நாடு அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அதுமட்டுமல்லாமல் கோடை வெயில் தாக்கமும் இந்த ஆண்டு அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வை முன்கூட்டியே நடத்தி முடிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 5ஆம் தேதி வரை இந்த தேர்வுகள் நடைபெறும்.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் வன்முறை வெறியாட்டம்: திருச்சி சிவா வீட்டில் தாக்குதல்!
எனவே 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வை ஏப்ரல் 24ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 30ஆம் தேதி முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரிப்பு, கோடை வெயில் தாக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆண்டு இறுதித் தேர்வுகளை ஏப்ரல் 17ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதியுடன் முடிக்க தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஒரு வாரத்துக்கு முன்பாகவே கோடை விடுமுறை தொடங்கும். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி