ஆப்நகரம்

Tamil Nadu WRD நிலத்தடி நீர் எடுக்க கட்டணமா? தமிழக அரசு மறுப்பு!

நிலத்தடி நீர் எடுப்பதற்கான மத்திய அரசின் உத்தரவு தமிழகத்துக்கு பொருந்தாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 6 Jul 2022, 1:51 pm
நிலத்தடி நீர் எடுப்பதற்கு அனைவரும் முறையான அனுமதி பெற வேண்டும் என மத்திய நிலத்தடி நீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த அறிவிப்பு காரணமாக தமிழ்நாட்டிலும் நிலத்தடி நீர் எடுப்பதற்கு கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவாகுமோ என்ற அச்சம் பொது மக்களிடையே ஏற்பட்டது.
Samayam Tamil water


இந்நிலையில் தமிழ்நாடு அரசின் நீர் வளத்துறை வெளியிட்ட அறிவிப்பில் தமிழகத்துக்கு அந்த அறிவிப்பு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்திய அரசு, ஜல் சக்தி அமைச்சகம் தலைவர், மத்திய நிலத்தடி நீர் ஆணையம் வெளியிட்டுள்ள பொது அறிவிப்பு எண்.3/2022 நாள். 10.04.2022 அதிமுக மீன் பிடித்திருவிழா: ஸ்டாலின் போடும் தூண்டில்? வலையோடு வரும் பாஜக!தமிழ்நாட்டிற்கு பொருந்தாது எனவும், நில நீர் பாதுகாப்பு மற்றும் நீர் எடுத்தல் சம்மந்தமாக நடைமுறையில் உள்ள விதிகள் மறு அறிவிப்பு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என்று தெரிவித்து கொள்ளப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விசாரிக்கையில், 20 மாநிலங்களில் நிலத்தடி நீரை பாதுகாக்கும் ஆணையங்கள் இல்லாத நிலையில், அந்த மாநிலங்களில் மத்திய நிலத்தடி நீர் ஆணையம் அப்பணியினை செய்து வருகிறது.
AIADMK General council: அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு!
தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் உள்ள நிலத்தடி நீர் ஆணையங்கள் நிலத்தடி நீர் குறித்த விவகாரங்களை கவனித்து கொள்ளும். மேலும், தமிழகத்தில் நிலத்தடி நீர் மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டு விதிமுறைகள் தமிழக அரசினால் கையாளப்பட்டு வருகின்றன. எனவே மத்திய அரசின் அறிவிப்பு தமிழகத்துக்கு பொருந்தாது என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி