ஆப்நகரம்

கிராமக் கோயில் பூசாரிகளின் ஓய்வூதியம் உயர்வு-தமிழக அரசு அரசாணை வெளியீடு!

கிராமக் கோயில் பூசாரிகளின் ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

Samayam Tamil 23 Dec 2020, 8:40 pm
2020-21 பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, கிராமக் கோயில் பூசாரிகளின் ஓய்வூதியத்தை உயர்த்துவதாக சட்டப்பேரவை விதி எண் 110இன் கீழ் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


அதனைத்தொடர்ந்து, இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கிராமக் கோயில்களில் 20 ஆண்டுகள் பணிபுரிந்து 60 வயது நிறைந்த ஓய்வுபெற்ற பூசாரிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை ரூ.1,000இல் இருந்து ரூ.3,000ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதேபோல், ஓய்வூதியம் பெறுவதற்கான வருமான உச்சவரம்பு ரூ.24,000 லிருந்து ரூ.72,000ஆக உயர்த்தி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கென 2021-22 நிதியாண்டு முதல் ஓராண்டுக்கு தொடர் செலவினமாக செலவினத் தொகை ரூ.11.72 கோடி ஒதுக்கீடு செய்தும், நடப்பு நிதியாண்டில் 4 மாதங்களுக்கு மட்டும் தேவைப்படும் கூடுதல் தொகையான ரூ.3.13 கோடி நிதி ஒப்பளிப்பு செய்தும் உத்தரவிடப்படுவதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

மினி கிளினிக்குகள் மூலம் லாபம் பார்க்கும் தனியார்கள்; இதென்ன கொடுமை!

தமிழக அரசு அரசாணை


இந்த திட்டத்தின் கீழ் 1,325 பேர் பயனாளிகள் கூடுதலாக பயனடைவார்கள். இந்த திட்டம் மூலம் பயனாளிகள் எண்ணிக்கை 4 ஆயிரத்துக்கு மிகாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி