ஆப்நகரம்

யானைகள் ஊருக்குள் வருவதைத் தடுக்க சோலார் மின்வேலிகள்

யானைகள் விளை நிலங்களையும் வீடுகளையும் சேதப்படுத்துகின்றன. சில சமயம் அசம்பாவிதமாக உயிரிழப்பும் ஏற்படுகிறது.

Samayam Tamil 11 Nov 2018, 12:26 pm
யானைகள் ஊருக்குள் புகுவதைத் தடுக்க ஓசூர் வனப்பகுதியை ஒட்டி சோலார் மின் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
Samayam Tamil 1541907677316.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வன கோட்டத்தில் நானூறுக்கு மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டமாக வசிக்கின்றன. இவைகள் உணவு மற்றும் தண்ணீருக்காக அடிக்கடி ஊருக்குள் வருகின்றன.

அப்படி வரும் யானைகள் விளை நிலங்களையும் வீடுகளையும் சேதப்படுத்துகின்றன. சில சமயம் அசம்பாவிதமாக உயிரிழப்பும் ஏற்படுகிறது.

இந்தப் பிரச்னைக்கு முடிவு காணும் நோக்கில் யானைகள் ஊருக்குள் வருவது வாடிக்கையாக உள்ள பகுதிகளில் சோலார் மின் வேலிகள் அமைக்க தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இதன்படி, ஓசூர் வன எல்லையில் இந்த மின் வேலிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

அடுத்த செய்தி