ஆப்நகரம்

ஜெயலலிதா பிறந்தநாளில் 500 டாஸ்மாக் கடைகள் மூடல்

ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ம் தேதியன்று 500 மதுகடைகள் மூடுவதற்கு தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

Samayam Tamil 5 Feb 2018, 12:37 pm
ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ம் தேதியன்று 500 மதுகடைகள் மூடுவதற்கு தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
Samayam Tamil tn govt planned to close 500 tasmac on jayalalithaa birthday feb 24
ஜெயலலிதா பிறந்தநாளில் 500 டாஸ்மாக் கடைகள் மூடல்


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் வரும் பிப்ரவரி 24ம் தேதி வருகிறது. அன்றைய தினம் அம்மா ஸ்கூட்டர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நலத்திட்டங்கள் வழங்குவது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

இந்நிலையில், ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றதும் முதலில் கையெழுத்திட்ட 5 கோப்புகளில், மதுக்கடைகள் மூடிய நடவடிக்கை பெரிதும் பேசப்பட்டது.

இதனால், தற்போது அதேப் போன்று ஜெயலலிதாவைப் போற்றும் வகையில், அதிமுக தலைமையிலிலான தமிழக அரசு, அவரது பிறந்தநாளில் 500 மதுக்கடைகள் மூடி, படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

அடுத்த செய்தி