ஆப்நகரம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மத்திய அரசு ஆய்வறிக்கை; திரும்ப பெறக்கோரி தமிழக அரசு கடிதம்!

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக இருப்பது போன்ற அறிக்கையை தமிழக அரசு நிராகரித்துள்ளது.

Samayam Tamil 8 Sep 2018, 8:56 pm
சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக இருப்பது போன்ற அறிக்கையை தமிழக அரசு நிராகரித்துள்ளது.
Samayam Tamil Sterlite Industry


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நீண்ட போராட்டம் நடைபெற்றது. இதில் சில உயிர்களை பழிவாங்கிய பின், தமிழக அரசு ஆலையை மூடி சீல் வைத்தது. மேலும் நிரந்தரமாக மூட தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றியது.

இந்த சூழலில் மத்திய நீர்வளத்துறை தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுபாடு குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனை ஏற்க முடியாது என்று கூறி, தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், ஆலை ஏற்படுத்திய மாசுபாட்டால் மக்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது. இதன் காரணமாகவே ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த சூழலில் மத்திய நீர்வள அமைச்சகம் தூத்துக்குடி நீர்மாசு ஆய்வு நடத்த ஆணையிட்டது தவறானது.

இந்த அறிக்கையை திரும்பப் பெற வேண்டும். ஏனெனில் அறிக்கை ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக இருப்பதாக தோற்றமளிக்கிறது. இது சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும். மக்களிடத்தில் குழப்பம் விளைவிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

TN govt rejects Union water resources ministry's report on ground water contamination in Tuticorin.

அடுத்த செய்தி