ஆப்நகரம்

கல்லூரிகள் திறப்பு: இதை கண்டிப்பா மறந்துடாதீங்க!

தமிழ்நாடு அரசு ஏற்கெனவே அறிவித்தபடி இன்று (டிசம்பர் 7) கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 7 Dec 2020, 10:48 am
டிசம்பர் 2ஆம் தேதி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் படிக்கும் முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்குக் கல்லூரிகள் திறக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து இன்று முதல் இளங்கலை இறுதியாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
Samayam Tamil TN COLLEGE STUDENTS


இதற்கான முன்னேற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் செய்துவருகிறது. இந்நிலையில் கல்லூரி திறப்பு குறித்து பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி,

* “அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள், மாணவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்களின் சுகாதார பாதுகாப்புக்குப் போதுமான ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும்.

அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் பொங்கல் பரிசு - தமிழக அரசின் அசத்தல் திட்டம்!

*கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள கல்லூரிகளைத் திறக்கக் கூடாது. கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள், பேராசிரியர்கள் கல்லூரிகளுக்கு வர வேண்டாம்.

*கல்லூரிக்கு வருபவர்களை ஆரோக்கிய சேது செயலியைப் பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும்.

*கல்லூரி வளாகத்தில், நிர்வாக அலுவலகம், ஆய்வகம் என அனைத்து இடங்களில் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் ஆகியவற்றைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

*இறுதி ஆண்டு மாணவர்களைக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு நோக்கங்களுக்காக அனுமதிக்கலாம். ஆனால் ஒரே நேரத்தில் 50 சதவிகித மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். வளாகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க தேவையான வழிகாட்டுதல்களையும் வழங்க வேண்டும்.

ரஜினிகாந்த் பெங்களூர் பறக்க இது தான் காரணம்: வெளியான முக்கிய தகவல்!

*நேரடி வகுப்பு அல்லாமல் மாணவர்கள் ஆன்லைனிலேயே பாடங்களைக் கற்க விரும்பினால் அவர்களுக்குத் தேவையான ஸ்டடி மெட்டிரியலை கொடுக்க வேண்டும். போக்குவரத்து கட்டுப்பாடுகள் காரணமாகக் கல்லூரிகளுக்கு வர முடியாத வெளிநாட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் கற்பிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

*தெர்மல் ஸ்கேனிங் செய்த பிறகு விடுதி மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். தொற்று அறிகுறி இருந்தால் அனுமதி இல்லை. உடனடியாக தனிமைப்படுத்தப்படுவர்.

*விடுதியில் ஓர் அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்க அனுமதி. மாணவர்கள் முடிந்தவரைக் கல்லூரிகளுக்கு அருகில் உள்ள உறவினர்கள் வீட்டில் தங்கிக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். வாரத்துக்கு ஆறு நாட்கள் கல்லூரிகள் செயல்படும்” என அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி