ஆப்நகரம்

டெங்கு ஒழிப்புக்காக மத்திய அரசு ரூ 256 கோடி வழங்க தமிழக அரசு கோரிக்கை

சென்னை வந்துள்ள மத்திய குழுவினரிடம் டெங்கு ஒழிப்பு பணிக்காக 219 கோடி ரூபாய் வழங்க தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளதாக சுகாரதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

TNN 13 Oct 2017, 12:47 pm
சென்னை வந்துள்ள மத்திய குழுவினரிடம் டெங்கு ஒழிப்பு பணிக்காக 256 கோடி ரூபாய் வழங்க தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளதாக சுகாரதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil tn govt request 256 crore fund to central govt says minister vijyabaskar
டெங்கு ஒழிப்புக்காக மத்திய அரசு ரூ 256 கோடி வழங்க தமிழக அரசு கோரிக்கை


தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சலின் பாதிப்பு மிக மோசமாக உள்ளது. தினமும் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள டெங்கு பாதிப்பை ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட மத்திய குழு ஒன்று சென்னை வந்துள்ளது. இந்தக் குழுவில் எய்ம்ஸ் மருத்துவர் அசுதோஷ் பிஷ்வாஸ், குழந்தைகள் நல மருத்துவர் சுவாதி துப்லிஸ், பூச்சியினால் பரவும் நோய் கட்டுபாட்டு மையத்தைச் சேர்ந்த கவுஷல் குமார், கல்பனா பர்வா, வினய் கர்க் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

முதலில் இந்தக் குழு எந்த மருத்துவமனையை ஆய்வு செய்ய வேண்டும், எத்தனை நாட்கள் தங்கி ஆய்வு செய்ய வேண்டும் உள்ளிட்ட அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக சுகாதார அதிகாரிகளுடன் இன்று ஆய்வு நடத்தினார்கள்.


இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், சுகாதாரத் துறை இயக்குனர் குழந்தை சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாரதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை வந்துள்ள மத்திய குழுவினரிடம் டெங்கு ஒழிப்பு பணிக்காக 256 கோடி ரூபாய் வழங்க தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி