ஆப்நகரம்

''கலவரத்திற்கு வித்திடும் வேல் யாத்திரைக்கு அனுமதிக்கவே கூடாது'' - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

பாஜக பல்வேறு மாநிலங்களில் மத அடையாளங்களை பயன்படுத்தி கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை அக்கட்சி எடுத்து வருவதை கண்கூடாக பார்க்க முடிவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 5 Nov 2020, 8:11 pm
மத அடையாளங்களை அரசியலுக்கு பயன்படுத்தி கலவரங்களை வளர்ப்பதும், அதன் மூலம் கட்சியின் நடவடிக்கைகளை திட்டமிடுவதும் தான் பாஜகவின் வாடிக்கையாக உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
Samayam Tamil பாஜக வேல் யாத்திரை


இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, கலவரங்களை வளர்ப்பதும், அதன் மூலம் கட்சியின் நடவடிக்கைகளை திட்டமிடுவதும் தான் பாஜகவின் வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் அதே நோக்கத்தோடு தான் அத்தகையதொரு அரசியலை மேற்கொள்ளவும், அதற்கான வாய்ப்பாகவும் தமிழகம் தழுவிய அளவில் வேல் யாத்திரையை மேற்கொள்ள பாஜக திட்டமிட்டிருந்தது.

அத்தகையதொரு அறிவிப்பு வந்தவுடனேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது கடுமையான ஆட்சேபனையைத் தெரிவித்ததோடு, கலவரத்திற்கு வித்திடும் அந்த வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்கக்கூடாது என தமிழக அரசுக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தது.

அரசியல் கட்சி: நடிகர் விஜய் விளக்கம்!

தற்போது பாஜக நடத்த திட்டமிட்டிருந்த வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க மறுத்த தமிழக அரசின் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுவின் சார்பில் வரவேற்பு தெரிவிப்பதோடு, அனுமதி கேட்டு பாஜக நீதிமன்றத்திற்கு சென்று மேல் முறையீடு செய்தாலும், அங்கும் உறுதியாக வாதாடி அனுமதி மறுக்கப்பட்டதை உறுதி செய்ய வேண்டுமெனவும், வகுப்புவாத அரசியலை எந்தவொரு வடிவத்திலும் தமிழகத்தில் அனுமதிக்க முடியாது எனும் நிலைப்பாட்டில் அரசு உறுதியாக இருக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுவின் சார்பில் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்'' என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நவம்பர் 10 முதல் தொடங்கவுள்ள வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்திருப்பதும், வேல் யாத்திரை தொடர்பாக தமிழக அரசே முடிவெடுக்கும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி