ஆப்நகரம்

உறுப்புக் கல்லூரிகளில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களையும் நிரந்தப்படுத்த வேண்டும்: முத்தரசன்!

பல்கலைக்கழகங்களின் உறுப்புக் கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் அனைத்துப் பணியாளர்களையும், அரசுக் கல்லூரிகளில் பணித் தொடர்ச்சியோடு பணிபுரியும் வகையில் பணியமர்த்தி, அவர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.

Samayam Tamil 16 Jul 2018, 2:40 pm
பல்கலைக்கழகங்களின் உறுப்புக் கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் அனைத்துப் பணியாளர்களையும், அரசுக் கல்லூரிகளில் பணித் தொடர்ச்சியோடு பணிபுரியும் வகையில் பணியமர்த்தி, அவர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்றுஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.
Samayam Tamil ra m
உறுப்புக் கல்லூரிகளில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களையும் நிரந்தப்படுத்த வேண்டும்: முத்தரசன்!


இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “பல்கலைக்கழகங்களின் உறுப்புக் கல்லூரிகளாக இயங்கிவந்த 41 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு அரசு, அரசுக் கல்லூரிகளாக மாற்றி அறிவித்துள்ளது.

இதனையொட்டி அரசுக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் தகுதிகாண் தேர்வு எழுதுவதன் மூலம் உதவிப் பேராசியர்களாக பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது. ஆனால் 41 உறுப்புக் கல்லூரிகளிலும் அலுவலகப் பணியாளர்களாக பணிபுரிந்து வருவோர் பணி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருப்பதால் நூற்றுக்கணக்கான பணியாளர்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளது.

கடந்த காலத்தில் தொகுப்பூதிய பணியாளர்களை நிரந்தரப்படுத்தியது போல், தற்போது உறுப்புக் கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் அனைத்துப் பணியாளர்களையும், அரசுக் கல்லூரிகளில் பணித் தொடர்ச்சியோடு பணிபுரியும் வகையில் பணியமர்த்தி, அவர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்.

இதேபோல் உறுப்புக் கல்லூரிகளில் கல்விப் பணியாற்றி வந்த கவுரவ விரிவுரையாளர்கள் தகுதிகாண் தேர்வில் பங்கேற்க அனுமதித்து உதவிப் பேராசிரியர்களாக பணி நிரந்தரப்படுத்த வேண்டும்”. இவ்வாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி