தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வந்தது. நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் மே 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதுபோக, தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், ஐந்து கோடி தடுப்பூசிகள் வேண்டுமென சர்வதேச டெண்டர் கோரப்பட்டுள்ளது.
90 நாட்களுக்குள் 5 கோடி பேருக்கு தடுப்பூசி போட தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும், தமிழகத்திலேயே ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், மே 20ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேலானவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். எனவே, மே 20ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேலானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
90 நாட்களுக்குள் 5 கோடி பேருக்கு தடுப்பூசி போட தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும், தமிழகத்திலேயே ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், மே 20ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேலானவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். எனவே, மே 20ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேலானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.