ஆப்நகரம்

கல்விச் செலவையும் அரசே ஏற்கும்... ஜாக்பாட் அடிக்கும் நேத்ரா

ஊரடங்கு காலத்தில்‌, ஏழை, எளிய மக்களுக்கு செலவிட்டதை அங்கீகரிக்கும்‌ வகையில்‌, செல்வி நேத்ராவின்‌ உயர்‌ கல்வி செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும்‌.

Samayam Tamil 6 Jun 2020, 2:46 pm
மதுரை: சலூன் கடைக்காரரின் மகள் நேத்ரா ஐ.நாவுக்கான நல்லெண்ணத் தூதராக நேற்று நியமிக்கப்பட்டார். இந்நிலையில், நேத்ராவின் மேற்படிப்புச் செலவை தமிழக அரசே ஏற்கும் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Samayam Tamil madurai saloon shop owner


தன் மகளின் எதிர்காலத்துக்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை, கொரோனா நிவாரணப்பணிகளுக்கு பயன்படுத்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடியால் பாரட்டப்பட்டவர் மதுரையில் சலூன் கடை வைத்திருக்கும் மோகன். இவரது மகள் நேத்ராவை ஐ.நாவுக்கான நல்லெண்ணத்தூதராக நேற்று மத்திய அரசு நியமித்தது.

இந்நிலையில், நேத்ராவைப் பாராட்டியும், அவரது உயர்கல்விச் செலவைத் தமிழ்நாடு அரசே ஏற்கும் என்று உறுதியளித்தும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:

மாண்புமிகு அம்மாவின்‌ அரசு, கொரோனா வைரஸ்‌ நோய்‌ தொற்றினை தடுக்க பல்வேறு தீவிர நோய்தடுப்பு பணிகளையும்‌, நிவாரணப்‌ பணிகளையும்‌ போர்க்கால அடிப்படையில்‌ மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு அரசோடு இணைந்து பல்வேறு தன்னார்வ அமைப்புகளும்‌, தன்னார்வலர்களும்‌ கொரோனா முடிதிருத்தகம்‌ நடத்தி வரும்‌ திரு. மோகன்‌ என்பவர்‌, தனது மகள்‌ செல்வி.நேத்ராவின்‌ படிப்புக்காக சேமித்து வைத்திருந்த பணத்தை தனது மகளின்‌ வேண்டுகோளுக்கிணங்க, ஏழை, எளிய மக்களுக்கு உணவு பொருட்கள்‌ மற்றும்‌ காய்கறிகள்‌ வாங்க செலவிட்டதற்கு, தமிழ்நாட்டு மக்கள்‌ சார்பாக எனது மனமார்ந்த பாராட்டுதல்களை தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

தாமதமாக அறிவிக்கப்படும் கொரோனா உயிரிழப்புகள்... இறப்பை குறைத்து சொல்கிறதா அரசு?

தன்னலம்‌ கருதாமல்‌, அர்ப்பணிப்பு உணர்வுடன்‌ எதிர்கால படிப்பிற்கு சேமித்து வைத்திருந்த பணத்தை, ஊரடங்கு காலத்தில்‌, ஏழை, எளிய மக்களுக்கு செலவிட்டதை அங்கீகரிக்கும்‌ வகையில்‌, செல்வி நேத்ராவின்‌ உயர்‌ கல்வி செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும்‌.


செல்வி நேத்ரா அனைத்து வகையிலும்‌ சிறந்து விளங்கி, இதுபோன்ற பற்பல பாராட்டுதல்களையும்‌, அங்கீகாரத்தையும்‌ பெற்று தமிழ்நாட்டிற்கும்‌, இந்தியாவிற்கும்‌ மேலும்‌ பெருமை சேர்த்திட வேண்டும்‌ என இத்தருணத்தில்‌ நான்‌ மனதார வாழ்த்துகிறேன்.” என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாரட்டியுள்ளார்.

பிரதமரிடமிருந்து பாராட்டு, ஐ.நா. நல்லேண்ணத்தூதராக நியமனம் ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது மாணவியின் கல்விச்செலவையும் அரசே ஏற்றுக் கொண்டடுள்ளதால் நேத்ராவின் நல்லெண்ணத்துக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது என்று சமூக வலைதளங்களில் கருத்துகள் எழத்தொடங்கியுள்ளன.

அடுத்த செய்தி