ஆப்நகரம்

கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது – அமைச்சா் ஜெயக்குமாா்

அரசு மீது ஆதரமில்லாமல் குற்றம் சாட்டிவரும் கமல்ஹாசன் மீது அரசு நடவடிக்கை எடுக்க தயங்காது என்று மீன்வளத்துறை அமைச்சா் ஜெயக்குமாா் தொிவித்துள்ளாா்.

TOI Contributor 20 Nov 2017, 11:23 am
அரசு மீது ஆதரமில்லாமல் குற்றம் சாட்டிவரும் கமல்ஹாசன் மீது அரசு நடவடிக்கை எடுக்க தயங்காது என்று மீன்வளத்துறை அமைச்சா் ஜெயக்குமாா் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil tn govt will not hesitate to take action on actor kamal haasan minister jayakumar
கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது – அமைச்சா் ஜெயக்குமாா்


நடிகா் கமல்ஹாசன் தனது டுவிட்டா் பக்கத்தில் நேற்று இரவு “அரசாங்கமே திருடுவது குற்றம் தான். அதை கண்டுபிடித்த பின்னா், அதனை நிரூபிக்காமல் போவதும் குற்றம் தானே. ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று, குற்றவாளிகள் நாடாளக்கூடாது. மக்களும், அவரால் ஆய குடியரசும் செயல்பட்டே ஆகவேண்டும். மக்களே நடுவராக வேண்டும் என்று அரசை குற்றம் சாட்டியிருந்தாா்.

இதற்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சா் ஜெயக்குமாா் இன்று பதில் அளித்துள்ளாா். இது தொடா்பாக அமைச்சா் கூறுகையில், ஜெயலலிதா இருக்கும்போது தமிழகத்தை விட்டே ஓடுவேன் என்று தொிவித்தவா் கமல்ஹாசன். அவா் தற்போது யாருடைய கைப்பாவையாக செயல்படுகிறாா் என்று அனைவருக்கும் தொியவந்துள்ளது.

அரசின் மீது ஆதரமில்லாத குற்றச்சாட்டுகளை கமல்ஹாசன் தொிவித்து வருகிறாா். இதே நிலை தொடா்ந்தால் அவா் மீது சட்டரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு தயங்காது. மேலும், குணா திரைப்படத்தில் வருவது போன்று கற்பனை உலகத்திலேயே கமல்ஹாசன் வாழ்ந்து வருகிறாா்.

கட்சித் தொடங்க ரசிகா்களிடம் பணம் கேட்ட ஒரே நபா் கமல்ஹாசன் தான். அமைச்சா்கள் உள்பட நாங்கள் அனைவரும் உப்புப்போட்டு சாப்பிடுகிறோம் என்று கமல்ஹாசனின் கருத்துக்கு பதிலளித்துள்ளாா்.

அடுத்த செய்தி