ஆப்நகரம்

அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகள் பதிவிற்கு புதிய விதிகள்: தமிழக அரசு

அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பதிவு செய்வதற்கான புதிய விதிகள் நாளை வெளியிடப்படும் என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

TNN 4 May 2017, 2:59 pm
சென்னை: அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பதிவு செய்வதற்கான புதிய விதிகள் நாளை வெளியிடப்படும் என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
Samayam Tamil tn govt will release new rules for un registered real estate grounds
அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகள் பதிவிற்கு புதிய விதிகள்: தமிழக அரசு


தமிழகத்தில் உள்ள விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னைன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், விளைநிலங்களை அங்கீகாரமில்லாமல் வீட்டுமனைகளாக பத்திரப் பதிவு செய்ய, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி தடை விதித்தது. அதுமட்டுமல்லாமல் நிலங்களை வகைப்படுத்தி பட்டியல் தயாரிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. கடந்த மார்ச் மாதம் வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட நிலங்களை மறு பத்திரப்பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.

இதையடுத்து அக்டோபர் 20, 2016 தேதிக்கு முன் பதிவு செய்யப்பட்ட நிலங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கியது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நிலங்களை மறுபத்திரப்பதிவு செய்ய வழங்கப்பட்ட அனுமதியை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, ஆஜரான அரசு வழக்கறிஞர், பத்திரப்பதிவு விதியில் திருத்தம் செய்யப்பட்டு நாளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று கூறினார்.

TN Govt will release new rules for un registered real estate grounds.

அடுத்த செய்தி