ஆப்நகரம்

விளையாட்டு வீரர்களுக்கு பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு: முதல்வர் பழனிசாமி

விளையாட்டு வீரர்களுக்கு பொதுத்துறை நிறுவனங்களில் தகுதியின் அடிப்படையில் 2% வரை உள்ஒதுக்கீடாக வேலை வாய்ப்பு வழங்கப்படும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 15 Aug 2018, 12:53 pm
விளையாட்டு வீரர்களுக்கு பொதுத்துறை நிறுவனங்களில் தகுதியின் அடிப்படையில் 2% வரை உள்ஒதுக்கீடாக வேலை வாய்ப்பு வழங்கப்படும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil edapadi-palanasami455-15-1494841933


72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டையில் முதல்வர் எடப்பாடி, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர், விழாவில் அவர் பேசியதாவது:

'மனிதனின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், உணவு, கல்வி, குடியிருப்பு, சுகாதாரம், மின்சாரம், தொழில், வேளாண்மை, நீர்மேலாண்மை, வேலைவாய்ப்பு, பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகிய அனைத்தும் கிடைத்தலே உண்மையான சுதந்திரமாகும். அந்த வகையில், மேற்சொன்ன அனைத்தையும் வழங்கி, தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது என்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழக விளையாட்டுத் துறைக்கு முக்கியத்துவம் அளித்து, பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் பொருட்டு அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு கூட்டமைப்புகள் நடத்தும் தேசிய அளவிலான முதுநிலைப் போட்டிகளில், தமிழ்நாட்டின் சார்பில் பங்கேற்று தங்கம், வெள்ளி அல்லது வெண்கலப் பதக்கம் வென்றாலோ; நமது மாநிலம் சார்பாக நடத்தும் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி அல்லது வெண்கலப் பதக்கம் வென்றாலோ; அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில், தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், தங்கம், வெள்ளி அல்லது வெண்கலப் பதக்கம் வென்றாலோ; அல்லது நமது நாட்டின் சார்பாக கலந்து கொண்டால் கூட, அவர்களுக்கு தமிழ்நாடு அரசு அல்லது தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில், குறிப்பிட்ட பதவிகளில், தகுதியின் அடிப்படையில் 2% வரை உள்ஒதுக்கீடாக வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்'.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

அடுத்த செய்தி