ஆப்நகரம்

மருந்துக்கடையை விட மதுக்கடை அதிகமா இருக்கு: கமல் கண்டுபிடிப்பு

40 ஆண்டுகளாக இந்த தலைமுறையை குடிகாரர்களாக மாற்றியிருக்கிறோம் எனச் சாடினார்.

Samayam Tamil 9 Nov 2018, 9:45 pm
தருமபுரி: தமிழகத்தில் மருத்துக்கடைகளைவிட மதுக்கடைகள் அதிகமாக உள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறுயிருக்கிறார்.
Samayam Tamil kamal2277-1541683383


மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று மாலை தருமபுரி மாவட்டம் நல்லம் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்களிடம் பேசினார். அப்போது, “நல்லம்பள்ளி என்ற பெயரில் பள்ளி இருந்தாலும் இங்கு அரசு பள்ளி இல்லை. ஆனால் டாஸ்மாக் இருக்கிறது. உங்கள் கோபம் எல்லாம் எங்கள் கோபம். நாங்கள் சொல்வது மது ஒழிப்பு அல்ல, மது குறைப்பு.” என்றார்.

தொடர்ந்து, “மருந்துக்கடைகள் குறைவாக உள்ளன. ஆனால் டாஸ்மாக் கடைகள் பெருகிக் கிடக்கின்றன. 40 ஆண்டுகளாக இந்த தலைமுறையை குடிகாரர்களாக மாற்றியிருக்கிறோம். அரசு செய்ய வேண்டியதை தனியாரும், தனியார் செய்ய வேண்டியதை அரசும் செய்வது அநியாயம்.” எனச் சாடினார்.
“காரிமங்கலம் சுற்றுலாத் தலமாக இருந்தும், அடிப்படை வசதிகள்கூட இல்லை. ஏரிகள் இருந்தும், ஆற்றில் தண்ணீர் வீணாய்ப் போகிறது. ஏரிகளுக்கு தண்ணீர் வரும் கால்வாய்கள் தூர்வாராமல் கிடக்கின்றன.” என்றும் கூறினார்.

அடுத்த செய்தி