தமிழகத்தில் இதுவரை XE வகை கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை என, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில், கடந்த ஜனவரி மாத இறுதியில்,கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் குறைந்தது. இதன் காரணமாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. அதன்படி, பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், கொரோனா தினசரி பாதிப்பும் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இதற்கிடையே, ஐரோப்பிய நாடான பிரிட்டனில், ஒமைக்ரான் தொற்றின் திரிபான XE வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இது அதி வேகமாகப் பரவக் கூடியது என எச்சரிக்கப்பட்டு உள்ளது. அண்மையில், மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் வதோதராவுக்கு வந்த முதியவர் ஒருவருக்கு, XE வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
தமிழகத்திலும் வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இது குறித்து விளக்கம் அளித்த சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், உருமாறி வரும் கொரோனோ குறித்து மாறி மாறி தகவல்கள் வந்து கொண்டு உள்ளது. இதுவரை தமிழகத்தில் XE போன்ற வைரஸ் தொற்று போல் ஏதும் இல்லை. BA 2 ஒமைக்ரான் வகை தான் தமிழகத்தில் உள்ளது என தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று, மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் அரசு மருத்துவமனையில் விபத்து ஏற்பட்டு இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் சிகிச்சையில் உள்ளவர்களை சந்தித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நலம் விசாரித்தார். இதற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "புதிதாக பரவி வரும் XE வைரஸ் தொற்று குறித்து பீதி அடைய தேவையில்லை. தமிழகத்தில் உருமாறிய XE வைரஸ் தொற்று இதுவரை கண்டறியப்படவில்லை" என தெரிவித்தார்.
தமிழகத்தில், கடந்த ஜனவரி மாத இறுதியில்,கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் குறைந்தது. இதன் காரணமாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. அதன்படி, பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், கொரோனா தினசரி பாதிப்பும் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.
தமிழகத்திலும் வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இது குறித்து விளக்கம் அளித்த சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், உருமாறி வரும் கொரோனோ குறித்து மாறி மாறி தகவல்கள் வந்து கொண்டு உள்ளது. இதுவரை தமிழகத்தில் XE போன்ற வைரஸ் தொற்று போல் ஏதும் இல்லை. BA 2 ஒமைக்ரான் வகை தான் தமிழகத்தில் உள்ளது என தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று, மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் அரசு மருத்துவமனையில் விபத்து ஏற்பட்டு இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் சிகிச்சையில் உள்ளவர்களை சந்தித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நலம் விசாரித்தார். இதற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "புதிதாக பரவி வரும் XE வைரஸ் தொற்று குறித்து பீதி அடைய தேவையில்லை. தமிழகத்தில் உருமாறிய XE வைரஸ் தொற்று இதுவரை கண்டறியப்படவில்லை" என தெரிவித்தார்.