ஆப்நகரம்

தமிழக மருத்துவத்துறைக்கு முட்டு கொடுக்கும் விஜயபாஸ்கர்; கொந்தளிக்கும் நோயாளிகள்

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு முடிவு அட்டவணை ஒன்றை தனது டுவிட்டர் பக்கதில் வெளியிட்டுள்ளார். இதில் தமிழக அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர், மருத்துவர்கள் போதுமான அளவில் உள்ளனர். எனக் கூறும் வகையில் அந்த அட்டவணை உள்ளது.

Samayam Tamil 13 Jul 2019, 4:17 pm
அரசு மருத்துவமனைகளில் சரியாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என்பதாலேயே பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் வருமானத்தை மீறி அதிக கட்டணத்தில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக்கொள்கின்றனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம்தான் உள்ளது.
Samayam Tamil viajayabaskar.


சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு முடிவு அட்டவணை ஒன்றை தனது டுவிட்டர் பக்கதில் வெளியிட்டுள்ளார்.

இதில் தமிழக அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர், மருத்துவர்கள் போதுமான அளவில் உள்ளனர் எனக் கூறும் வகையில் ’டைம்ஸ் ஆஃப் இந்தியா’ இணையதளத்தில் வெளியான அந்த அட்டவணையில் கூறப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு, தில்லி, கர்நாடகா, கேரளா, கோவா, பஞ்சாப், ஜார்கண்ட், சட்டீஸ்கர், ஹரியானா, உத்திர பிரதேசம், பீகார் மாநிலங்களில் ஒரு அரசு மருத்துவர் ஒரு நாளைக்கு எவ்வளவு நோயாளிகளுக்கு மருத்துவம் செய்ய வேண்டும் என பட்டியல் வெளியிடப்பட்டு இருந்தது.
இதில் குறைந்தபட்சமாக தமிழ்நாட்டில் ஒரு அரசு மருத்துவமனை மருத்துவர் 253 நோயாளிகளை பார்ப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதிகபட்சமாக ஹிமாசல பிரதேசத்தில் ஒரு மருத்துவர் 3124 நோயளிகளைப் பார்க்கிறார். ஆக தமிழகத்தில் மருத்துவர்களில் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வெளி நோயாளிகள் சிறப்பான முறையில் கவனிக்கப்படுகிறார் என்று தனது டூவீட் மூலம் கூறுகிறார் விஜயபாஸ்கர்.

ஆனால் உண்மையில் வெளி நோயாளிகள் விஜய பாஸ்கர் சொன்னதுபோல சரியாக கவனிக்கப்படுகிறார்களா எனக் கேட்டால் அவர் இட்ட டுவிட்டர் பதிவின் கமெண்டிலேயே இல்லை என பதில் வருகிறது.

கமெண்டில் ஒருவர், அரசு மருத்துவர்களில் கவனக் குறைவால்தான் தன் சகோதரர் உயிர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட போது பிரிந்தது என்றுள்ளார். இதுபோல பலர் பல குற்றச்சாட்டுகளை அடுக்கிச் செல்கின்றனர்.

கடந்த வாரம் சட்டமன்ற கூட்டத்தொடரில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கட்டில், காட், ஸ்டெச்சர் இல்லை என அப்பகுதி மக்களிடம் இருந்து புகார் வருகிறது என திமுக சட்டமன்ற உறுப்பினர் கேள்வியை முன்வைத்தார். அம்மாவின் அரசின் சிறப்பான செயல்பாட்டால் வெளிநாடுகளில் இருந்து வாங்கப்பட்ட நவீன இயந்திரங்கள் அந்த மருத்துவமனையில் உள்ளன. இவர் என்னவென்றால் காட் இல்லை, பெட்ஷீட் இல்லை என சிறிய விஷயங்களை பற்றிப் பேசுகிறார் என ஆவேசமாகக் கூறினார்.

மேலும் அரசு மருத்துவமனைகளில் இலவச மருத்துவம் பெற வரும் நோயாளிகளை மருத்துவர்கள், துப்புறவு பணியாளர்கள் நடத்தும் விதம் மோசமாக உள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அடுத்த செய்தி