ஆப்நகரம்

''இந்தியா வல்லரசு ஆகும் வரை கடன் கேட்காதீர்'' .. எப்படித்தான் இப்படி யோசிப்பாய்ங்களோ...

தனது ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர் கடன் கேட்ககூடாதென, வித்தியாச போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளார் அதன் உரிமையாளர்.

Samayam Tamil 19 Oct 2019, 8:38 pm
கடன் அன்பை முறிக்கும், வா பேசு பழகு கடன் மட்டும் கேட்காதே என இப்படியான வாசகங்கள் தான் பெரும்பாலும் கடைகளிலும், ஹோட்டல்களிலும் எழுதப்பட்டிருக்கும். ஆனால் இந்தியா வல்லரசு ஆகும் வரை கடன் கேட்காதீர் என்ற புது வாசகத்தை அறிமுகப்படுத்தியுள்ளார் புதுக்கோட்டையை சேர்ந்த ஹோட்டல் முதலாளி.
Samayam Tamil 8


2 நிமிட வாசிப்பில் இன்றைய நிகழ்வுகள் - 19.10.19

புதுக்கோட்டை, ராயவரம் பேருந்து நிலையம் அருகே ஹோட்டல் நடத்தி வருபவர் கணேசன் (26). இவர் இப்பகுதியில் கடந்த 5 மாதங்களாக வியாபாரத்தை நடத்தி வருகிறார். என்ன நடந்தது என்பது தெரியவில்லை திடீரென இப்படியான ஒரு வாசகத்தை தனது ஹோட்டலின் நுழைவு வாயிலில் ஒட்டியுள்ளார்.

இந்த வாசகத்தை படிக்கும் அனைவரும் தங்களுக்குள் சிரித்துக்கொள்வது அப்பகுதியில் வாடிக்கையாகி விட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து கணேசன் கூறுகையில், எனது சொந்த ஊர் தஞ்சாவூர். நான் 4 ஆண்டுகளாக துபாயில் பணியாற்றி வந்தேன்.

வலிமையை நீங்க காட்டுங்க., விஸ்வாசத்த நாங்க காட்டுறோம்..! களமிறங்கிய தல ரசிகர்கள்..

எனக்கு சமையலில் ஆர்வம் இருந்ததால் தனது சக நண்பர்களுடன் சேர்ந்து இப்பகுதியில் ஹோட்டல் ஒன்றை ஆரம்பித்தோம். இங்கு வரும் பலரும் சாப்பிட்டு விட்டு கடன் சொல்லி விடுகின்றனர். நான் வெளியூர் காரன் என்பதால் எதுவும் பேசமுடியவில்லை.

முதல்முறையாக தமிழகத்துக்கு வரும் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்

அப்படி கடன் சொல்லிவிட்டு செல்பவர்கள், பெரும்பாலும் திரும்ப வந்து கடனை ஒப்படைப்பதும் இல்லை. இதனால் கடன் கேட்பவர்களை சமாளிக்க இந்த வாசகத்தை ஹோட்டல் முழுவதும் தெரியும்படியாக ஒட்டியுள்ளேன் என்றார். சேவல் முட்டையிடும் வரை, கடல் நீர் வற்றும் வரை என்பதை போன்று அதே நினைப்பில் கணேசன் இந்த வாசகத்தை சிந்தித்துள்ளாரா என்பது தெரியவில்லை. ஆகையால் இந்தியா வல்லரசு ஆகும் வரை யாரும் அவர் கடையில் கடன் கேட்காதீர்கள்..

அடுத்த செய்தி