ஆப்நகரம்

பெண்கள் பாதுகாப்பில் முதல் மாநிலம் தமிழகம்: முதல்வர் பெருமிதம்

தமிழகம்தான் நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான முதல் மாநிலம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 27 Jun 2018, 5:48 pm
தமிழகம்தான் நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான முதல் மாநிலம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil palanisami_15396_11090_11162


சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி பொது ஒழுங்கை பராமரிப்பதில் தமிழகக் காவல்துறையினர் சிறப்பாக செயல்படுகிறது என்று தெரிவித்தார்.

“பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகத்தில் குற்றங்களின் விகிதம் குறைவாக உள்ளது. குற்றவாளிகளை கண்டுபிடிப்பதிலும், நீதிமன்றத்தில் நிறுத்துவதிலும் காவல்துறையினர் சிறப்பாக செயல்படுகிறார்கள். குற்றவழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் விகிதமும் அதிகரித்துள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கங்கள் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மிகக் குறைவாக உள்ளதாக தேசிய குற்ற ஆவண புள்ளிவிவரம் மூலம் தெரியவருகிறது. தமிழகம்தான் நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான முதல் மாநிலமாக உள்ளது. தொடர் கண்காணிப்புகள் மூலம் மூளைச்சலைவை மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் தமிழக இளைஞர்கள் இணைவது தடுக்கப்பட்டுள்ளது.” என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அடுத்த செய்தி