ஆப்நகரம்

தமிழகம் முழுவதும் 50,000 பேர் வேலை இழக்கும் அபாயம்!

தமிழகம் முழுவதும் 20,000 கிளினிக்கல் மூடப்படும எனறும், இதனால், ஐம்பதாயிரம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.

Samayam Tamil 18 Sep 2018, 5:25 pm
தமிழகம் முழுவதும் 20,000 கிளினிக்கல் மூடப்படும எனறும், இதனால், ஐம்பதாயிரம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.
Samayam Tamil TN lab technicians fear job loss


மாநிலம் முழுவதும் ஒரே விதமான தரமான மருத்துவம் என்ற அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் மாநில சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், மருத்துவ இல்லங்கள், மெடிக்கல், கிளினிக்குகள், ஆய்வுக்கூடங்கள் மற்றும் எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் மையங்கள் என அனைத்தும் அரசிடம் பதிவு பெற வேண்டும் என்று நிபந்தனை விதிகக்கப்பட்டது.

மேலும், மருத்துவ ஆய்வக அறைகள், முதலுதவி சிகிச்சை அறைகள 500 சதுர அடி அளவில் இருக்க வேண்டும் என்றும், நகர்ப்புறங்களில 700 முதல் 1500 சதுர அடியாக இருக்க வேணடும் என்றும் விதிமுறைகள் கொண்டு வரப்பட்டது. சுகாதாரத்துறை மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் இந்த விதிமுறைகளை அமல்படுத்தியது.

ஏற்கனவே உள்ள மருத்துவ ஆய்வகங்கள் அரசின் புதிய விதிமுறைகளின்படி இல்லையென்றாலும் அவர்களுக்கு ஆண்டு இறுதி வரையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்குள்ளாக, மருத்துவ அறைகளை மாற்றியமைத்து, அரசிடம் பதிவு பெற வேணடும். புதிதாக தொடங்கப்படும் ஆய்வுக்கூடங்கள், மருத்துவமனைகளுக்கு 6 மாதம் வரையில் கெடு விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அரசு விதித்துள்ள இந்த புதிய விதிமுறைகளின்படி இல்லை. மேலும், ஆய்வக உதவியாளர்கள் டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தற்போது ஆய்வகங்களில் பணிபுரிவோர்கள் அனுபவம் மட்டுமே உள்ளவர்கள். இதன் காரணமாக, 20,000 கிளினிக்கல் மூடப்படும எனறும், ஐம்பதாயிரம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

அடுத்த செய்தி