ஆப்நகரம்

இரண்டு நாட்களில் வெப்பம் கூடும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வரும் 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 19 Jun 2018, 12:25 am
தமிழகத்தில் வரும் 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Samayam Tamil Tamil_News_large_1732909


தமிழகத்தின் ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பம் அதிகரித்துக் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு 2 மூதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது.

கடல் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்பதால் தென் கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் கடலுக்குச் செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

அடுத்த செய்தி