ஆப்நகரம்

மேயர் தேர்தலுக்கான சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்

தமிழகத்தில் மேயர்களை தேர்ந்தெடுப்பதற்கான சட்டத்திருத்த மசோதா பேரவையில் இன்று நிறைவேறியது

TNN 23 Jun 2016, 1:53 pm
சென்னை : தமிழகத்தில் மேயர்களை தேர்ந்தெடுப்பதற்கான சட்டத்திருத்த மசோதா பேரவையில் இன்று நிறைவேறியது.
Samayam Tamil tn mayor election reform
மேயர் தேர்தலுக்கான சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்


மாநகராட்சி மேயர்களை மக்கள் தேர்வு செய்யும் முறை மாற்றப்பட்டு, மாமன்ற உறுப்பினர்களே தேர்வு செய்யும் முறை வருகின்ற உள்ளாட்சித்தேர்தல் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்கான சட்டத்திருத்த மசோதா நேற்று பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இன்று பேரவையில் இந்த மசோதாவிற்கு 132 பேர் ஆதரவும், 88 பேர் எதிர்ப்பும் தெரிவித்தனர். இதனையடுத்து மசோதா நிறைவேறியதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

இதற்கு முன் மாநகராட்சி மேயர்களை மக்கள் தேர்ந்தெடுத்ததால் மாமன்றக்கூட்டம் சரிவர நடைபெறாததால், கவுன்சிலர்களே மேயர்களை தேர்ந்தெடுக்கும் முறை கொண்டுவரப்பட்டுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்