ஆப்நகரம்

அமைச்சர் கோகுல இந்திரா மண் சோறு சாப்பிட்டாரா?

ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக வேண்டி, அமைச்சர் கோகுல இந்திரா மண் சோறு சாப்பிட்டதாக, சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

TOI Contributor 26 Feb 2016, 6:20 pm
ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக வேண்டி, அமைச்சர் கோகுல இந்திரா மண் சோறு சாப்பிட்டதாக, சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil tn minister gokula indira prays for jayalalithaa
அமைச்சர் கோகுல இந்திரா மண் சோறு சாப்பிட்டாரா?


முதலமைச்சர் ஜெயலலிதாவின் அதிதீவிர ஆதரவாளர்களில் கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் கோகுல இந்திராவும் ஒருவர். சொத்துக்குவிப்பு வழக்கில், ஜெயலலிதா சிறை சென்ற நாட்களில் தொடங்கி, அவர் பல்வேறு சிறப்பு வழிபாடுகளை நடத்திவருகிறார்.

இந்நிலையில், அமைச்சர் கோகுல இந்திரா, வெள்ளிக்கிழமை அன்று சென்னை அசோக் நகரில் உள்ள பிடாரி காளியம்மன் கோவிலில் மண் சோறு சாப்பிட்டதாக, சமூக ஊடகங்களில் தகவல் பரவிவருகிறது.

விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதில், அதிமுக வெற்றி பெற வேண்டியும், ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக வர வேண்டியும், கோகுல இந்திரா மண் சோறு சாப்பிட்டதாக, அந்த தகவல்களில் கூறப்பட்டுள்ளது.

இதேபோன்று, ஸ்ரீரங்கம் கோவிலில் சசிகலா சுவாமி தரிசனம் செய்ததாகவும், முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில், அவர் சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தியதாகவும் சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி