ஆப்நகரம்

டீ கடையில் செல்ஃபி எடுத்த அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார் டீக்கடைக்குச் சென்று அங்கிருந்த இளைஞர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

Samayam Tamil 28 Jan 2018, 3:39 pm
அமைச்சர் ஜெயக்குமார் டீக்கடைக்குச் சென்று அங்கிருந்த இளைஞர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
Samayam Tamil tn minister jayakumar seen near a tea shop taking selfies with youngsters
டீ கடையில் செல்ஃபி எடுத்த அமைச்சர் ஜெயக்குமார்


சென்னை தண்டையார்பேட்டையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். அப்போது அருகில் இருந்த டீக்கடைக்குச் சென்று டீ குடித்தார்.

அமைச்சரைப் பாரத்த அப்பகுதி பொதுமக்கள் அவரைச் சூழ்ந்துகொண்டனர். மக்களைச் சந்தித்ததும் அமைச்சர் ஜெயக்குமார் உற்சாகமாகி, “நானும் ராயபுரம் தான்” என்று கூறினார்.

பிறகு, அங்கிருந்து செல்லும் முன்பாக இளைஞர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டு அசத்தினார். ஏராளமானவர்கள் தங்கள் மொபைலில் அமைச்சருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

அடுத்த செய்தி