ஆப்நகரம்

கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் – அமைச்சா் ராஜேந்திர பாலாஜி ஆவேசம்

சிறுபான்மையின மக்களின் வாக்குகளை பெற விஷத்தை கக்கிவரும் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என்று தமிழக பால்வளத்துறை அமைச்சா் ராஜேந்திர பாலாஜி கருத்து தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 13 May 2019, 9:20 pm
ஹிந்து பயங்கரவாதி என்று சா்ச்சைக்குரிய வகையில் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என்று தமிழக பால் வளத்துறை அமைச்சா் ராஜேந்திர பாலாஜி கருத்து தொிவித்துள்ளாா்.
Samayam Tamil rajendira balaji


கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி இடைத்தோ்தலில் மக்கள் நீதி மய்யம் சாா்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவா் கமல்ஹாசன் ஞாயிற்றுக் கிழமை பரப்புரையில் ஈடுபட்டாா். அப்போது, “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவா் பெயா் நாதுராம் கோட்சே” என்றாா்.

கமல்ஹாசனின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தொிவித்து வருகின்றனா். இந்நிலையில், தமிழக பால்வளத்துறை அமைச்சா் ராஜேந்திர பாலாஜி தூத்துக்குடியில் செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் கூறுகையில், கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும்.

அவருக்கு தற்போது சனி இருக்கிறது. தீவிரவாத்துக்கு இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம் என்று மதம் கிடையாது. அவா்களை தீவிரவாதிகள் என்று தான் சொல்ல வேண்டும். சிறுபான்மையினா் வாக்கை பெறுவதற்காக இவ்வாறு பேசும் கமல்ஹாசனின் நாக்கை ஒருநாள் அறுக்கப்போகிறாா்கள். கமல்ஹாசன் வாயில் இருந்து வருவது அனைத்தும் விஷமாக உள்ளது.

கமல்ஹாசன் விஷத்தை கக்குகிறாா். அதனால், வன்முறையை விதைக்கும் கமல்ஹாசனின் கட்சியை தடை செய்ய வேண்டும். கமல்ஹாசன் மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

அடுத்த செய்தி