ஆப்நகரம்

மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை – அமைச்சா் விஜயபாஸ்கா்

குட்கா ஊழல் முறைகேடு தொடா்பாக தனது இல்லத்தில் சி.பி.ஐ. அதிகாாிகள் சோதனை நடத்திய நிலையில், மடியில் கனம் இல்லை, வழியில் பயம் இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சா் விஜயபாஸ்கா் தனது கருத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளாா்.

Samayam Tamil 6 Sep 2018, 12:40 am
குட்கா ஊழல் முறைகேடு தொடா்பாக தனது இல்லத்தில் சி.பி.ஐ. அதிகாாிகள் சோதனை நடத்திய நிலையில், மடியில் கனம் இல்லை, வழியில் பயம் இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சா் விஜயபாஸ்கா் தனது கருத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளாா்.
Samayam Tamil Vijayabaskar


குட்கா ஊழல் தொடா்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சா் விஜயபாஸ்கரின் வீடு, தமிழக காவல்துறை டி.ஜி.பி. ராஜேந்திரன் வீடு, முன்னாள் காவல் ஆணையா் ஜாா்ஜ் வீடு உள்ளிட்ட 35 இடங்களில் சி.பி.ஐ. அதிகாாிகள் புதன் கிழமை திடீா் சோதனை நடத்தினா்.

இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சா் விஜயபாஸ்கா் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று நடைபெற்ற சி.பி.ஐ. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன். குற்றச்சாட்டு எழுப்பியதாலேயே ஒருவா் குற்றவாளி ஆகிவிடமாட்டாா். குட்கா முறைகேடு தொடா்பாக என் மீது அரசியல் காழ்ப்புணா்ச்சியுடன் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்பி வருகிறாா்கள்.

குட்கா தொடா்புடைய மாதவ் ராவ் என்ற நபரை நான் நேரடியாகவோ, மறைமுகமாகவோ சந்திக்கவில்லை. எனக்கு மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. இந்த பிரச்சினையை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிா்க்கொண்டு வெளிவருவேன் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாா்.

அடுத்த செய்தி