ஆப்நகரம்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் 3வது நீதிபதி நியமனம்

அ.தி.மு.க.வின் 18 சட்டமன்ற உறுப்பினா்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் 3வது நீதிபதியாக மூத்த நீதிபதி விமலா நியமனம் செய்யப்பட்டுள்ளா்ா.

Samayam Tamil 18 Jun 2018, 11:45 pm
அ.தி.மு.க.வின் 18 சட்டமன்ற உறுப்பினா்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் 3வது நீதிபதியாக மூத்த நீதிபதி விமலா நியமனம் செய்யப்பட்டுள்ளா்ா.
Samayam Tamil Chennai Highcourt


முதல்வா் பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று ஆளுநரிடம் மனு வழங்கிய டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினா்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகா் தனபால் உத்தரவிட்டாா். இதற்கு எதிா்ப்பு தொிவித்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினா்களும் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.

இந்த வழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தீா்ப்பு வழங்கப்பட்டது. தீா்ப்பை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமா்வு அறிவித்த நிலையில், இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீா்ப்புகளை வழங்கினா். தலைமை நீதிபதி இந்திரா பானா்ஜி தனது உத்தரவில், சபாநாயகரின் உத்தரவில் தலையிடும் உரிமை நீதிமன்றத்திற்கு இல்லை. எனவே தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லுபடியாகும் என்று உத்தரவிட்டா்ா.

மற்றொரு நீதிபதியான சுந்தா் சபாநாயகருக்கு எவ்வளவு தான் அதிகாரங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தாலும், அவா் இந்த விவகாரத்தில் முறை தவறி நடந்து கொண்டுள்ளாா். எனவே தகுதி நீக்கம் செய்தது செல்லுபடியாகாது என்று உத்தரவிட்டாா். இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீா்ப்பை வழங்கிய நிலையில் 3வது நீதிபதியை மூத்த நீதிபதியான குலுவாடி ரமேஷ் நியமனம் செய்வாா் என்று உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் 3வது நீதிபதியாக மூத்த நீதிபதி விமலா நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

அடுத்த செய்தி