அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையில் ஒற்றை தலைமைக்கான மோதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நீதிமன்ற வழக்குகள், அங்கீகரிக்காத தேர்தல் ஆணையம், நடத்த முடியாத பொதுச் செயலாளர் தேர்தல் என வரிசைகட்டி வம்புகள் நிற்கின்றன. இதற்கிடையில் பல்வேறு மாவட்டங்களுக்கு எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியினரை சந்தித்து வருகிறார். யார் இந்த சண்முகவேல்?
மேலும் கட்சி நிர்வாகிகளின் சுகம், துக்க நிகழ்வுகளிலும் தலைகாட்டி வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் தான் இன்று காலை ஈரோட்டிற்கு சென்றிருக்கிறார். இம்மாவட்டத்தில் அந்தியூர் அருகே அத்தாணி கருவல்வாடிபுதூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல். இவருக்கு வயது 64. ஈரோடு மாவட்ட ஊராட்சி குழுவின் மூன்றாவது வார்டு கவுன்சிலராகவும், ஈரோடு மாவட்ட கூட்டுறவு நுகர்வோர் பண்டகசாலையின் துணைத் தலைவராகவும் (அதிமுக) பதவி வகித்து வந்தார்.
சோகத்தில் மூழ்கிய ஈரோடு அதிமுக
இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை சண்முகவேலுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது சண்முகவேல் குடும்பத்தினரை பெரிதும் சோகத்தில் ஆழ்த்தியது. மேலும் ஈரோடு அதிமுக வட்டாரத்திலும் சோகம் சூழ்ந்தது.
நேரில் சென்ற எடப்பாடி
இந்நிலையில் சண்முகவேல் மறைவிற்கு துக்கம் விசாரிக்க எடப்பாடி பழனிசாமி நேரில் சென்றார். அங்கு அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் சண்முகவேல் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன் மற்றும் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஆபரேஷன் அதிமுக
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, அமித் ஷாவை சந்திக்க வேண்டிய அவசியமில்லை என்று சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி கொடுத்த பேட்டி டெல்லி வரை சென்று அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் ’ஆபரேஷன் அதிமுக’ என்ற பெயரில் கிடுக்குப்பிடி போட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எடப்பாடி வியூகம்
அதாவது, முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை தூசு தட்டும் நடவடிக்கைகள், ரெய்டு அஸ்திரங்கள் ஏவப்பட வாய்ப்பிருக்கிறது. இதன்மூலம் எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்க காய்கள் நகர்த்தப்பட்டு வருகிறதாம். இந்த விஷயத்தை எதிர்கொள்ளும் வகையில் எடப்பாடி தரப்பு ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக பேச்சு அடிபடுகிறது.
மறுபுறம் வரும் 2024 மக்களவை தேர்தலை ஒட்டி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டியுள்ளது. தற்போது பிளவுபட்டு கிடப்பதை போன்ற சூழல் அடுத்த இரண்டு ஆண்டுகளும் தொடர்ந்தால் அது தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும். இதுகுறித்தும் வியூகம் வகுக்க வேண்டிய கட்டாயம் எடப்பாடி தரப்பிற்கு உண்டாகியிருக்கிறது.
மேலும் கட்சி நிர்வாகிகளின் சுகம், துக்க நிகழ்வுகளிலும் தலைகாட்டி வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் தான் இன்று காலை ஈரோட்டிற்கு சென்றிருக்கிறார். இம்மாவட்டத்தில் அந்தியூர் அருகே அத்தாணி கருவல்வாடிபுதூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல். இவருக்கு வயது 64. ஈரோடு மாவட்ட ஊராட்சி குழுவின் மூன்றாவது வார்டு கவுன்சிலராகவும், ஈரோடு மாவட்ட கூட்டுறவு நுகர்வோர் பண்டகசாலையின் துணைத் தலைவராகவும் (அதிமுக) பதவி வகித்து வந்தார்.
சோகத்தில் மூழ்கிய ஈரோடு அதிமுக
இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை சண்முகவேலுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது சண்முகவேல் குடும்பத்தினரை பெரிதும் சோகத்தில் ஆழ்த்தியது. மேலும் ஈரோடு அதிமுக வட்டாரத்திலும் சோகம் சூழ்ந்தது.
நேரில் சென்ற எடப்பாடி
இந்நிலையில் சண்முகவேல் மறைவிற்கு துக்கம் விசாரிக்க எடப்பாடி பழனிசாமி நேரில் சென்றார். அங்கு அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் சண்முகவேல் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன் மற்றும் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஆபரேஷன் அதிமுக
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, அமித் ஷாவை சந்திக்க வேண்டிய அவசியமில்லை என்று சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி கொடுத்த பேட்டி டெல்லி வரை சென்று அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் ’ஆபரேஷன் அதிமுக’ என்ற பெயரில் கிடுக்குப்பிடி போட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எடப்பாடி வியூகம்
அதாவது, முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை தூசு தட்டும் நடவடிக்கைகள், ரெய்டு அஸ்திரங்கள் ஏவப்பட வாய்ப்பிருக்கிறது. இதன்மூலம் எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்க காய்கள் நகர்த்தப்பட்டு வருகிறதாம். இந்த விஷயத்தை எதிர்கொள்ளும் வகையில் எடப்பாடி தரப்பு ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக பேச்சு அடிபடுகிறது.
மறுபுறம் வரும் 2024 மக்களவை தேர்தலை ஒட்டி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டியுள்ளது. தற்போது பிளவுபட்டு கிடப்பதை போன்ற சூழல் அடுத்த இரண்டு ஆண்டுகளும் தொடர்ந்தால் அது தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும். இதுகுறித்தும் வியூகம் வகுக்க வேண்டிய கட்டாயம் எடப்பாடி தரப்பிற்கு உண்டாகியிருக்கிறது.