ஆப்நகரம்

கரூர் இளைஞர் கொலை வழக்கு: குற்றவாளிகளை தேடும் போலீஸ்

கரூரில் மாற்று சாதிப் பெண்ணை திருமணம் செய்ததற்காக, இளைஞரை வெட்டிக் கொன்ற கூலிப்படையினரை போலீசார் தேடிவருகின்றனர்.

TNN 27 Mar 2016, 10:06 pm
கரூரில் மாற்று சாதிப் பெண்ணை திருமணம் செய்ததற்காக, இளைஞரை வெட்டிக் கொன்ற கூலிப்படையினரை போலீசார் தேடிவருகின்றனர்.
Samayam Tamil tn police begin probe into murder of youth who married other caste woman
கரூர் இளைஞர் கொலை வழக்கு: குற்றவாளிகளை தேடும் போலீஸ்

கரூரில்,சனிக்கிழமை இரவு டாஸ்மாக்கில் மது அருந்திவிட்டு வந்த, சுரேஷ் ஆரோக்கியசாமி என்ற இளைஞரை, இருசக்கர வாகனங்களில் வந்த கூலிப்படையினர் வெட்டிப் படுகொலை செய்தனர். இதன்பின், தப்பி ஓடிய அவர்களில், சிவநேசன் என்பவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

பெங்களூருவைச் சேர்ந்த மாற்று சாதிப் பெண்ணை, சுரேஷ் திருமணம் செய்துள்ளார். இதில், அந்த பெண் மீண்டும் தாய் வீட்டுக்கேச் சென்றுவிட்ட நிலையில், இதுதொடர்பாக, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுரேஷ் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இதில், ஆத்திரம் அடைந்த பெண்வீட்டார், அவரைக் கொல்ல ஏற்பாடு செய்ததாக, போலீசில் பிடிபட்ட சிவநேசன் தெரிவித்தார். இதன்பேரில், அவன் மீது வழக்குப் பதிவு செய்து, சிறையில் அடைத்த போலீசார், இதர கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி