ஆப்நகரம்

மதுரையில் பரபரப்பு; சக கட்சியினரை தாக்கிய திமுக இளைஞர் அணி செயலாளர் மீது கொலை வழக்குப்பதிவு!

மதுரை: திமுக இளைஞர் அணிக்குள் மோதல் வெடித்ததை அடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Samayam Tamil 31 Jan 2019, 9:23 pm
மதுரை மாவட்டம் பேரையூர் அடுத்த எல் கோட்டானிபட்டியைச் சேர்ந்தவர் வடிவேல்(33). இவர் எல் கோட்டானிபட்டி பஞ்சாயத்து திமுக ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார்.
Samayam Tamil Police Case


கடந்த செவ்வாய் இரவு, ராமுன்னு நகரைச் சேர்ந்த திமுகவின் டி கல்லுப்பட்டி யூனியன் இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் ஆர்.பாண்டிமுருகன் காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது மற்றொரு காரில் வந்த வடிவேலு, பாண்டிமுருகன் கார் மீது மோதியுள்ளார். இதையடுத்து காரில் இருந்து வெளியே வந்த வடிவேலு, பாண்டிமுருகனைக் கத்தியால் தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த அவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் மற்றொரு கார் மீது வடிவேலு மோதியுள்ளார். அந்தக் காரில் பயணித்த மணிமுருகனுக்கு இடது காலில் முறிவு ஏற்பட்டது.

இவர் ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சக கட்சியைச் சேர்ந்த ஒருவரை கத்தியை காட்டி மிரட்டிய சம்பவத்தில், வடிவேலு மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி