ஆப்நகரம்

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களிடம் காவல்துறையினா் விசாரணை

கா்நாடகா மாநிலத்தில் தங்கியுள்ள டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினா்களிடம் தமிழக காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

TOI Contributor 12 Sep 2017, 3:35 pm
கா்நாடகா மாநிலத்தில் தங்கியுள்ள டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினா்களிடம் தமிழக காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Samayam Tamil tn police investigated to ttv supported mlas
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களிடம் காவல்துறையினா் விசாரணை


அ.தி.மு.க.வில் இரு அணிகளாக பிளவு ஏற்பட்டு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் புதுச்சோி சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டனா். இந்நிலையில், முதல்வா் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான சட்டமன்ற உறுப்பினா்களுடனான பொதுக்குழு கூட்டம் சென்னையில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் பல முக்கிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாத சட்டமன்ற உறுப்பினா்கள் மீது முறைப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சா்கள் சிலா் ஏற்கனவே அறிவித்திருந்தனா்.

கூட்டம் நிறைவு பெற்ற நிலையில் கா்நாடகா மாநிலம் குடகு பகுதியில் உள்ள தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினா்கள் தங்கவைக்கப்பட்டுள்ள சொகுசு விடுதிக்குள் தமிழக காவல் துறையினா் ஆய்வு நடத்தி வருகின்றனா்.

கோவை மாவட்ட பதிவு எண் கொண்ட வாகனத்தில் சாதாரண உடையில் விடுதிக்குள் சென்ற காவல்துறையினா் அதன்பின்பு தங்களை காவல் துறையினராக அடையாளம் காட்டிக் கொண்டனா். காவல்துறையினாின் இந்த அதிரடி நடவடிக்கையால் அந்த பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினா்கள் அனைவரும் அவா்களது சுய விருப்பத்தின் அடிப்படையில் தான் தங்கியுள்ளனரா? அல்லது ஏதேனும் வலுக்கட்டாயத்தின் அடிப்படையில் தங்கவைக்கப்பட்டுள்ளனரா என்ற நோக்கத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் விசாரணை நிறைவு பெற்று காவலதுறையினா் செய்தியாளா்களிடம் விளக்கமளித்தால் மட்டுமே விசாரணையின் உண்மை நிலை என்னவென்று தொியவரும்.

அடுத்த செய்தி